search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் தடியடி"

    • சட்டவிரோதமாக மசூதி பகுதியில் கட்டப்பட்டதை இடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
    • போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள சஞ்சௌலி என்ற இடத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியை ஒட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக இந்த கட்டுமான பணி நடைபெற்று வருவதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதை இடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

    இன்று நூற்றுக்கணக்கானோர் சப்சி மண்டி தல்லி என்ற இடத்தில் இருந்து சஞ்சௌலி நோக்கி பேரணி நடத்தினர். அப்போது ஜெய் ஸ்ரீ ராம், ஹிந்து ஒற்றுமை ஜிந்தாபாத் (Hindu Ekta Zindabad) என கோஷமிட்டனர். அவர்களை மசூதி அருகே செல்ல விடாமல் போலீசார் தடுப்பு அமைத்து தடுத்தனர்.

    அப்போது தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் சென்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடியடி நடத்தனர். அத்துடன் தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    • பத்லாபூரில் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, நகரம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளியின் பணியாளர்களில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ வைரலானது.

    ரெயில்வே வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தப் போராட்டம் காரணமாக உள்ளூர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பத்லாபூர்வழியாக செல்லும் 10க்கும் மேற்பட்ட ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், பத்லாபூரில் நடந்துள்ள இச்சம்பவம் நடந்துள்ளது நிலைகுலைய வைத்துள்ளது.

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி சென்னை - மும்பை அணிகள் மோதுகிறது.
    • ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    16-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.

    • புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர்.

    புதுச்சேரி:

    ஐ.பி.எல் நிர்வாகம் பேன் பார்க் ஒன்றை அமைத்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க நாடு முழுவதும் 45 நகரங்களில் பிரம்மாண்ட திரைகள் மூலம் போட்டிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது.

    புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    சென்னை அணி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மைதானம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பியது. இதனையடுத்து இரவு 8 மணிக்கு நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் அங்கேயே நின்று கூச்சல் போட்டனர்.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×