என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்"

    • தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 9ஆயிரத்து 670 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
    • கவர்னர் உறுதிமொழி கூற பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொலைநிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 4 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்று பேசினார்.

    தமிழ்நாடு கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பி.எச்டி படிப்பு முடித்த 302 பேருக்கும், 490 எம்.பில், 119 முதுகலை மாணவர்கள், இளங்கலை மாணவர்கள், 257 பி.எட் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 9ஆயிரத்து 670 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். மொத்தம் 10 ஆயிரத்து 840 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.

    அப்போது கவர்னர் உறுதிமொழி கூற பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் அளிக்கப்பட்ட பட்டங்களுக்கு கவர்னர் அதிகாரம் அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்லைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    பட்டமளிப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    • துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார்.
    • திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை.

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இதை அடுத்து, உரிய தகுதி இல்லாத 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டது.

    முறையான பதிலை தராமல் காலம் கடத்திய திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, புகார் தொடர்பாக 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சர்ச்சை காரணமாக பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம்.
    • பதட்டம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டு, இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார்.

    ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார். இதனால் அறையின் பூட்டை உடைத்து அவர் பதவியேற்றார். இதுகுறித்த விபரம் வருமாறு:-

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017- 18-ம் ஆண்டில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உரிய தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் 40 பேருக்கும் தகுதி காண்பருவம் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக துணை வேந்தராக இருந்த திருவள்ளுவனை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து, துணைவேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை பொறுப்பு துணை வேந்தராக தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கரை கவர்னர் நியமித்தார்.

    இந்நிலையில் பொறுப்பு துணை வேந்தர் சங்கருக்கும், பேராசிரியர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதிக்கும் பதிவாளர் (பொ) தியாகராஜன் ஓரிரு நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். அதில் சங்கரின் செயல்பாடுகளால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே அசாதாரண சூழல் ஏற்படும் நிலை உள்ளது.

    பல்கலைக்கழக நலன் கருதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக சங்கருக்கு பதிலாக பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதி துணைவேந்தர் பணிகளை கவனிக்க எதிர்வரும் ஆட்சிக்குழுவில் துணை வேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை செயல்படுவார் என தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதை பார்த்த பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உடனடியாக பதிவாளர் (பொ) தியாகராஜனுக்கும், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனுக்கும் கடிதம் அனுப்பினார். அதில், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பாளராக தியாகராஜன் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டார்.

    பல்கலைக்கழக வேந்தரின் (கவர்னர்) ஆணைப்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதாலும், பதிவாளர் பொறுப்பாக பணிபுரிந்து வரும் தியாகராஜனும் இந்த விசாரணை வரம்புக்குட்பட்ட ஒரு கல்வியாளராக இருப்பதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் தியாகராஜனை பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவித்து ஆணையிடப்படுகிறது.

    அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனை மறு ஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தர பதிவாளர் பணி நியமனம் செய்யப்படும் வரை பதிவாளர் பொறு ப்பாக நியமனம் செய்து ஆணை இடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த இரு கடிதங்களால் எழுந்த சர்ச்சை காரணமாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

    இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) பொறுப்பு துணை துணைவேந்தர் சங்கர் உத்தரவுப்படி பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, வெற்றி செல்வன் இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. உடனடியாக பல்கலைக்கழக ஊழியர்கள் கதவை உடைத்தனர். பின்னர், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதவி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் மற்றொரு தனி அறையில் அமர்ந்து உள்ளார்.


    பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதிவேற்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தமிழ் பல்கலைக்கழகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×