என் மலர்
நீங்கள் தேடியது "உழைப்பாளி"
- ஆண்களுக்கு இணையாக பெண்கள் உழைக்கின்றனர்.
- கட்டிட வேலை மற்றும் சிறு சிறு வியாபாரங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை
உலகம் இயங்குவதற்கு தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. காட்டை வயலாக்கி நாட்டை வளமாக்கி வருபவர்கள் தொழிலாளர்கள். இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க தொழிலாளர்கள் படாதபாடு படுகிறார்கள்.
கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை யில் நகரங்களில் பல்வேறு பணிகளை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற தொழில் நகரங்கள் முன்னேற்றத்திற்கு தொழி லாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலில் சாதனை படைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் தொழிலாளர்கள். மதுரை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஒருவரின் வருமானம் போதாது என்பதால் பெண்களும் கட்டாயமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்கள் செய்யும் கடினமான வேலைகளையும் பெண்கள் செய்து வருகின்றனர்.
கொளுத்தும் வெயிலில் கட்டிட வேலை மற்றும் சிறு சிறு வியாபாரங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல குடும்பங்களில் ஆண்கள் மது குடித்துவிட்டு குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் பெண்கள் வீதிக்கு வந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தற்போது ராணுவத்தில் கூட பெண்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு தொழிலா ளர்களும் தங்கள் குடும்ப நலனுக்காக பல்வேறு துன்பங்களை தாங்கிக் கொண்டு தினம் தினம் உழைத்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளும் நம்பிக்கையுடன் சுயதொழில் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம், கோவில் உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருமானம் பெறுகின்றனர்.
தொழிலாளர்களை நினைவு கூற வைக்கும் இந்த மே தின நாளில் அனைவரும் உழைத்து உயர உறுதிமொழி ஏற்போம்.
- உழைத்து சாப்பிட வேண்டும், பிறரை சார்ந்து இருக்க கூடாது என்பதை தாரக மந்திரமாக கொண்டவர்கள் உலகில் அரிது.
- முதுமையை காரணம் காட்டி வீட்டில் ஓய்வெடுக்க விரும்பாமல் வீதியில் இறங்கி காய்கறி விற்று வருகிறார்.
சாதனையாளர்களும், உழைப்பாளிகளும் வயதை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள். வயது என்பது வெறும் எண்களே என்பது அவர்களின் கருத்து.
பணி ஓய்வுக்கு பின்னர் ஒரு அறையில் ஓரமாக முடங்கி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் ஒருசிலர் தங்களுடைய வாழ்க்கை முறையை தேர்ந்து எடுப்பார்கள். ஒரு சாண் வயிற்றுக்காக தாங்களே உழைத்து சாப்பிட வேண்டும், பிறரை சார்ந்து இருக்க கூடாது என்பதை தாரக மந்திரமாக கொண்டவர்கள் உலகில் அரிது.
அவர்களில் ஒருவர்தான் இந்த பஞ்சாப் பாட்டாளி. அந்த முதியவருக்கு வயது 60, 70 அல்ல... 100-யும் தாண்டி.... 108 வயதான அவர் முதுமையை காரணம் காட்டி வீட்டில் ஓய்வெடுக்க விரும்பாமல் வீதியில் இறங்கி காய்கறி விற்று வருகிறார்.
வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை தள்ளுவண்டியில் வைத்து நிரப்பி கொண்டு வீதியில் விற்கிறார். அனைத்து வயதினருக்கும் தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ள இவர் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியான 3 நாட்களில் 3½ லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.