search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொழியில்"

    • மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி.). மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது.
    • இதில் கடந்த தேர்வுகளின்ேபாது ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் கணினி வழியாக தேர்வு நடத்த ப்பட்டது.

    சேலம்:

    மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி.). மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது. இதில் கடந்த தேர்வுகளின்ேபாது ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் கணினி வழியாக தேர்வு நடத்த ப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய அரசு, இனிமேல் தேர்வு களை மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என உத்த ரவிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான நட வடிக்கைகள் எடுத்துள்ளது.

    அதன்படி மல்டி-டாஸ்கிங் அல்லாத டெக்னிக்கல் அலுவலர் மற்றும் ஹவில்தார் பணியிடங்களுக்கான தேர்வு -2022 அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர்.

    தற்போது இது ெதாடர்பாக ஒரு அறிக்கை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்வர் தங்களது பிராந்திய மொழியைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பிராந்திய மொழியில் கேள்விகளைப் கணினியில் பார்ப்பார். அதாவது தேர்வர் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றால் அவர் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக தமிழ் மொழியில் கேள்விகளைப் பார்க்க முடியும் என்பது ஆகும்.

    ஒரு வேளை தேர்வர் எந்த பிராந்திய மொழியும் தேர்ந்தெடுக்க வில்லை என்றால், அவர்களுக்கு கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×