search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹஜ் யாத்திரை"

    • போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.
    • அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    ரியாத்:

    சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு புனித பயணம் செல்வதை முஸ்லிம் மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதுகின்றனர்.

    இதனால் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மெக்கா, மதீனாவுக்கு 'ஹஜ்' புனித பயணம் செல்கின்றனர். அதன்படி இந்தாண்டு ஹஜ் பயணமாக மெக்காவில் சுமார் 18 லட்சம் முஸ்லிம்கள் குவிந்தனர்.

    இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக மெக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.

    இதனால் ஹஜ் பயணம் சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

    இந்நிலையில் சவூதி அரேபியாவில் வெப்ப அலை காரணமாக 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சவுதி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பகத் அல் ஜலாஜெல் கூறும்போது,

    ஹஜ் பயணம் சென்ற யாத்ரீகர்கள் இறப்பு எண்ணிக்கை 1,301-ஐ எட்டி உள்ளது. 83 சதவீதம் பேர் ஹஜ் பயணம் செய்ய பதிவு செய்யப்படாதவர்கள். போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.

    வெப்ப அலையின் ஆபத்துகளில் இருந்து யாத்ரீகர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள முடியும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே, 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாதவரம் பால் பண்ணையில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் அடையாளப்படுத்தப்பட்டு நிலமாற்றம் செய்யும் பணிகள் முடிவுற்றுள்ளது.
    • முதலமைச்சரே வேந்தர்களை பல்கலைக்கழகங்களில் நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது என்று இதற்கு முன்பு குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொண்டுவந்துள்ளது.

    சென்னை:

    சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று, மாநில அளவிலான அனைத்து இணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் 19 மாவட்ட செயற்பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் சில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1,136 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் 44 திட்டப்பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும், தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கு செல்லக்கூடிய பயனாளிகளுக்கு வரும் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 19 இடங்களில் மருத்துவ முன்பரிசோதனை, உடற்தகுதி பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. 3 வயதுக்கு மேற்பட்டோருக்கு கியூ.எம்.எம்.வி. தடுப்பூசி ஒரு தவணை மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு எஸ்.ஐ.வி. மற்றும் கியூ.எம்.எம்.வி. ஆகிய 2 தடுப்பூசிகள் ஒரு தவணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிமிருந்து 6 ஆயிரத்து 300 டோஸ் கியூ.எம்.எம்.வி. மற்றும் 945 டோஸ் எஸ்.ஐ.வி. தடுப்பூசிகள் வந்துள்ளது.

    மாதவரம் பால் பண்ணையில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் அடையாளப்படுத்தப்பட்டு நிலமாற்றம் செய்யும் பணிகள் முடிவுற்றுள்ளது. இதேபோல, அண்ணா நகரில் உள்ள சித்தா ஆஸ்பத்திரியில், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. 2022 பிப்ரவரி மாதம் 18-ந்தேதி, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு கவர்னரின் பரிந்துரை மற்றும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. 2022 மார்ச் 15-ந்தேதி இந்த வரைவு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தார்.

    2022 ஏப்ரல் 28-ந்தேதி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 2022 மே மாதம் 5-ந்தேதி கவர்னர் ஒப்புதல் வேண்டி மசோதா சட்டத்துறையால் அனுப்பபட்டது. 2 மாதம் கழித்து, 'மசோதாவில் உள்ள மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட சில பிரிவுகள் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டத்தில் உள்ள சில சட்டப்பிரிவுகளுக்கு முரண்பாடாக உள்ளதா? என்பதை ஆராய்ந்து குறிப்புரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு விரிவான விளக்கம் கவர்னரின் தனிச்செயலருக்கு அனுப்பபட்டது. கவர்னரின் ஒப்புதலை பெற 7 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மசோதா பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு முரணாக இருக்கின்றது என்ற தகவல் கூறப்பட்டு வந்தது.

    முதலமைச்சரே வேந்தர்களை பல்கலைக்கழகங்களில் நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது என்று இதற்கு முன்பு குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொண்டுவந்துள்ளது. அதுபோலவே இந்த மசோதாவிலும் கொண்டுவரப்படும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டது. குஜராத்தில் இந்த மாதிரியான மசோதா கொண்டுவரப்பட்டபோது அந்த மாநிலத்தின் கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளார். மத்திய, மாநில உறவை ஆராயும் பூஞ்சி ஆணையம், 'கவர்னருக்கு வேந்தர்களை நியமிக்கும் பணி கூடுதல் சுமையாகும்' என்று கூறியுள்ளது. எனவே, கவர்னர் இதனை கருத்தில் கொண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கடிதம் விரைவில் அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×