என் மலர்
நீங்கள் தேடியது "கல்வியாண்டு"
- அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
- அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
இதில் பெரும்பாலும் 1-ம் வகுப்புக்கு தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரையிலான 20 நாட்களில் வந்த 14 வேலை நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ளது.
- புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் முருகன் பேட்டி
- தேர்ச்சி விழுக்காடை அடுத்த கல்வியாண்டில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த புகழேந்தி, திருவாரூர் மாவட்டத்திற்கு மாற்றப் பட்டார். இதையடுத்து புதிய முதன்மை கல்வி அதிகாரி யாக சேலம் மாவட்ட கல்வி அதிகாரி முருகன் நியமனம் செய்யப்பட்டார்.
அவர் இன்று நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தொடக்க கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விழுக்காடு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் முதன்மை கல்வி அலுவலர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 97.05 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விழுக்காடை அடுத்த கல்வியாண்டில் மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் எந்தெந்த பள்ளிகள் எவ்வளவு தேர்ச்சி பெற்றுள்ளது, தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க பள்ளிகளில் இன்னும் என்னென்ன நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.