search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு. Bar"

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
    • மனுகொடுக்க வந்த மகேந்திரன் என்பவர் டாஸ்மாக் மதுக்கடைகள் நீண்ட நேரமாக திறந்து இருப்பதால், பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது என கோஷமிட்டார்.

    கடலூர்,:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். கடலூர் மாவட்டம் கிள்ளையை சேர்ந்த மகேந்திரனும் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு அலுவலக வளாகத்திற்கு வந்தார். அப்போது அவர் டாஸ்மாக் மதுக்கடைகள் நீண்ட நேரமாக திறந்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது என கோஷமிட்டார். அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அழைத்து உங்களது கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடமோ அல்லது மாவட்ட நிர்வாகத்திடமோ மனு அளிக்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இப்படி பேசக்கூடாது என எச்சரித்தனர். அதன் பின்னர் மகேந்திரன் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.  இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×