search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில நிர்வாகிகள் கூட்டம்"

    • ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் சம்மேளன தலைவர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போக்குவரத்துக் கழகங்களின் நிதிப்பற்றாக் குறையை 2022-ம் ஆண்டு முதல் ஈடுசெய்வது என அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பரிந்துரைகளும் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகைகள் சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகம் செலவு செய்துவிட்டது.

    இதன் காரணமாக பணி ஓய்வின் போது தொழிலாளர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கால பலன்கள் வழங்கப்படவில்லை. சுமார் 18 மாதங்களாக 6000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் கடந்த 102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் 90 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    போக்குவரத்துக் கழகங்களில் கடந்த பல ஆண்டுகளாக வாரிசு வேலை முறையாக வழங்கப்படவில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அனைவருக்கும் வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும்.

    ஊதிய ஒப்பங்நதம் நிறைவு பெற்று 9 மாத காலம் முடிந்துவிட்டது. எனவே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்.

    பணியாளர்களை காண்ட்ராக்ட் முறையில் நியமனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.

    இவற்றை தொழிலா ளர்கள் மத்தியில் விளக்கி சொல்லும் அடிப்படையில் ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய வாயிற்கூட்டங்கள் நடத்துவது என்றும் ஜூன் 24-ந் தேதி காலை 10 மணி முதல் 25-ந் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் 24 மணிநேரம் உண்ணா விரதம் மேற்கொள்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் நெசவாளர் அணி வலியுறுத்தல்
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் தனியார் திருமண மண்டபத்தில் மாநில காங்கிரஸ் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    மாநில நெசவாளர் அணி தலைவர் ஜி.என்.சுந்தரவேல் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர்கள் டி.ஆர்.கோதண்டராமன், டி.கே.கதிரேசன், மாநில நெசவாளர் அணி பொருளாளர் அனகை விமல்காந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.எம். தேவராஜ் வரவேற்றார்.

    இந்தக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஜவுளிபூங்கா அமைக்கவேண்டும்.இந்த ஜவுளிபூங்காவிற்கு முன்னாள் முதலமைச்சர் குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருந்தலைவர் காமராஜர் பெயரவைக்க வேண்டுமென அரசை கேட்டுக் கொள்வது.

    நெசவுத் தொழிலுக்கான நூல் சாய மருந்துகள் மீது மத்திய அரசு விதித்துள்ள ஜி எஸ் டி வரியை முற்றிலுமாக நீக்கி கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசை கேட்டுக் கொள்வது.

    தமிழக அரசு நெசவாளர்களுக்கான ஓய்வூதியம் தற்போது ரூ.1000 மட்டும் வழங்கி வருகிறது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கேற்ப நெசவாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் அனைவருக்கும் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கு அறிவித்த 10 சதவீதம் அகவிலைப்படியை ஜனவரி 1-ந் தேதியிட்டு அனைத்து நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், மேலும் அடிப்படைக் கூலி 20 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தீர்மானங்களை நகர நெசவாளர் அணி தலைவர் கோ.ஜெயவேலு வாசித்தார்.

    கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள். நெசவாளர் அணி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×