search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "-கலெக்டர் ரவிச்சந்திரன்"

    • கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
    • கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தும் பயனாளிகளுக்கு கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அபராத வட்டி தள்ளுபடி

    தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 வரை கடன் உதவி பெற்ற தென்காசி மாவட்ட பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகை யினை செலுத்தும் பயனாளி களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலா ளர்களால் வழங்கப்படும்.

    டிசம்பர் மாதம்

    இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்படும். தாட்கோ, மாவட்ட மேலாளர்கள் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளபடி அசல் தொகையினை பயனாளிகளிடம் இருந்து வசூல் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாசில்தார் அலுவலகம், 2-வது தளம், தென்காசி என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலு வலகத் தொலைபேசி எண் 04633-214487 மற்றும் செல்போன் எண் 74488 28513 மூல மாக விவரம் பெற்று கொள்ள லாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • குற்றால அருவி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பணிகள் செயல் படுத்தப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என 2022- 2023-ம் ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

    ரூ. 11 கோடியில் வளர்ச்சி பணி

    அதன்படி குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. அந்த வகையில் ரூ. 11 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசும்போது, தற்போது பிரதான அருவிப் பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    அப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பறை, தோரணவாயில் புதுப்பித்தல், பாதை சீரமைத்தல், சிறுவர் பூங்கா மேம்பாடு மற்றும் குற்றாலம் பேரூராட்சி ஆலோ சனையுடன் அடிப்படை தேவை பூர்த்தி செய்தல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் செயல் படுத்தப்படும். தொடர்ந்து மற்ற பகுதிகளி லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் பயன்பெறு வார்கள் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொ றியாளர் சீனிவா சன், சுற்றுலா அலுவலர் சீதாராமன், மண்டல சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கார்த்திக்குமார், தலைமை செயல் அதிகாரி திருமலை நம்பிராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிர மணியன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திர குமார் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    ×