என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாஜக நிர்வாகி தாக்குதல்"
- கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்தும், ரஞ்சித்தும் சேர்ந்து புதிதாக இறைச்சி கடை தொடங்கி உள்ளார்கள்.
- பரந்தாமன் ஆலந்தூர் போலீசில் புகார் செய்து உள்ளார்.
சென்னை:
ஆலந்தூர் லஸ்கர் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 40). பா.ஜனதா பட்டியல் அணி மாநிலச் செயலாளராக இருக்கிறார். அந்த பகுதியில் பல வருடங்களாக இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்தும், ரஞ்சித்தும் சேர்ந்து புதிதாக இறைச்சி கடை தொடங்கி உள்ளார்கள். அந்த கடையில் சரியாக வியாபாரம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் நள்ளிரவில் பரந்தாமனின் வீடு புகுந்து அவரை தாக்க முயன்று உள்ளார்கள்.
இதுபற்றி பரந்தாமன் ஆலந்தூர் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் வீடு புகுந்த கேமரா ஆதாரங்களையும் கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.
- கொதிக்கும் தார் சாலையில் தலைக்குப்புற விழுந்த சுரேஷ் கழுத்தில் மிதித்ததால் வலி தாங்க முடியாமலும், மூச்சு விட முடியாமலும் வேதனை அடைந்தார்.
- பா.ஜ.க. பிரமுகரை டி.எஸ்.பி. காலால் மிதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலியில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காரில் வந்தார்.
அப்போது பா.ஜ.க.வினர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாகவும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகிரி சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் டி.எஸ்.பி. வெங்கடரமணா ரெட்டி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அப்போது முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
இதனைக் கண்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் குண்டலப்பள்ளி பர நாயக்கா, ராமி ரெட்டி பிரதாப் குமார் ரெட்டி எம்.எல்.ஏ, பொறுப்பாளர்கள் முகிராளா சுரேஷ் வெங்கடேஸ்வரன் ஆகியோர் போலீசாரின் தடுப்பையும் மீறி வாகனங்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் பா.ஜ.க.வினரை தாக்கினர். மேலும் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காரை மறிக்க முயன்ற சுரேஷை டி.எஸ்.பி. வெங்கடரமணா கீழே தள்ளி 2 கை, கால்களையும் மடித்துக்கொண்டு கழுத்தில் 2 கால்களால் மிதித்தார்.
கொதிக்கும் தார் சாலையில் தலைக்குப்புற விழுந்த சுரேஷ் கழுத்தில் மிதித்ததால் வலி தாங்க முடியாமலும், மூச்சு விட முடியாமலும் வேதனை அடைந்தார்.
இதனைக் கண்ட பா.ஜ.க.வினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுரேஷை விடுவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பா.ஜ.க. பிரமுகரை டி.எஸ்.பி. காலால் மிதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்