என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ் சாலைத்துறை"

    • நெடுஞ்சாலை உதவி பொறியாளர் எழிலரசி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • மோகன் பாபு பணி செய்ய விடாமல் தடுத்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப் பாடியில் நெடுஞ்சாலைத் துறையினரால் சேலம் - கடலூர் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. தொரப்பாடி குமரன் கோயில் தெரு முருகன் மகன் மோகன் பாபு (வயது 32) தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர். இவரது நிலத்தை அரசு கையகப் படுத்திக்கொண்டு அதற்குண்டான தொகையை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசாருடன் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் எழிலரசி தலைமையில் ஆக்கிர மிப்பை அகற்றினர். அங்கு வந்த மோகன்பாபு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அசிங்கமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் எழிலரசி புகார் செய்தார். அதன்பேரில் புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவின் கீழ் மோகன்பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாகும்.
    • ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில் நிறுவப்படும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

    நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாகும்.

    ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    உறுப்பினர்கள் 62 வயது வரை பணியாற்றலாம். நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயர்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம்.

    தனியாருடன் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×