என் மலர்
நீங்கள் தேடியது "இறுதித் தேர்வு"
- 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரிப்பதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குவதாக இருந்த இறுதித்தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இறுதித்தேர்வை ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2022-2023-ம் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கு 4-வது பருவத்துக்கான வகுப்புகள் கடந்த வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தன.
- இதையடுத்து வெள்ளிக்கி ழமை முதல் பருவ விடு முறை விடப்படுகிறது.
சேலம்:
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க ழகத்தின் இணைப்பு அங்கீ காரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கு 4-வது பருவத்துக்கான வகுப்புகள் கடந்த வியா ழக்கிழமையுடன் நிறைவடைந்தன.
இதையடுத்து வெள்ளிக்கி ழமை முதல் பருவ விடு முறை விடப்படுகிறது. தொடர்ந்து 4-வது பரு வத்துக்கான (இறுதிப் பருவம்) எழுத்துத்தேர்வு களை ஜூன் 2-வது வாரத்தில் நடத்த திட்ட மிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.
இறுதி பருவத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணை பல்க லைக்கழக தேர்வுத் துறை யால் விரைவில் வெளி யிடப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.