என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கற்கள்"

    • வரி உயர்வை திரும்ப பெற கோரி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.
    • கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகள மூலம் கட்டிடங்கள் கட்ட தேவையான கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை வாகனங்களில் அனுப்பப்படுகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு கனிம வள வரி என்ற பெயரில் வரியை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்குவாரி உரிமையாளர்கள் இந்த பல மடங்கு வரி உயர்வால் கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய வற்றிற்கு 1 யூனிட்டிற்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளதால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறி வந்தனர். ஆனால் அரசு வரியை குறைக்கவில்லை.

    இந்த நிலையில் வரி உயர்வை திரும்ப பெற கோரி குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குவாரி தொடர்பாக ரூ. 100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கட்டுமான பணிகளுக்கான கருங்கல், கிரஷர், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் கிடைக்க ாமல் கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அரசு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குவாரி உரிைமயாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
    • லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்,பொதுமக்கள்,மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி கடந்த 2 நாட்களாக அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் சுக்கம்பாளையம் பகுதியில் நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 6 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக அந்த லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் வரை, லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×