search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு"

    • பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 13-ந் தேதி வெல்ல ஆலையில் தூங்கிக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
    • இந்தநிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 13-ந் தேதி வெல்ல ஆலையில் தூங்கிக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

    இதில் 2 பேர் படுகாயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ரவி, பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, நேற்று பரமத்தி போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், பரமத்தி மற்றும் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டராக உள்ளார். 

    ×