என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்"
- மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.
- விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
2023-24-ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 23-ந் தேதி கடைசி நாளாகும்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும்மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்பவிளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடியவிளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மாணவிகளுக்கான விடுதிகள், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள், சென்னை ஜவகர்லால் நேரு விளையட்டு அரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி, சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது.
2023-24-ம் ஆண்டு விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டுப் பள்ளிகளில் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கான தேர்வுப் போட்டிகள், தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளிலும், மாணவியர்களுக்கான தேர்வு போட்டிகள், தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், தேக்வாண்டோ, கையுந்து பந்து, பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டு களிலும்நடைபெறும்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.