search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாடிய 8 பேர்"

    • காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
    • கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு, 

    ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கருமாரியம்மன் கோவில் காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லட்சுமணன்(46), அருன் குமரன்(40), மணிகண்டன்(28), காட்டுராஜா(50), பிரபு (38), சரவணன்(48), குமார்(40), சேட்டு (50) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.6, 150 பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

    • காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
    • பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.

    ஈரோடு, 

    ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கால் பாளையம் அடுத்த வைர பாளையம் காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.

    போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கவுதம் (30), மணி வண்ணன்(39), சுப்பிரமணி (30), மணிகண்டன்(38), செந்தில்குமார்(41), சக்திவேல்(48), சபரீஷ்(33), முத்து சபரிநாதன் (37) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக கரு ங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.7, 850 பணம் மற்றும் 5 மோட்டார் சைக்கி ள்கள் பறிமுதல் செய்ய ப்பட்டன. 

    • ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
    • சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அரசூர் ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது.

    அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரசூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் (64), ஆறுமுகம்(64), சந்திரன் (65), சுந்தரம் (70), அன்பழகன் (58), செல்வன் (53), திருமூர்த்தி (52), குமரேசன் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×