search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிளா சாவு"

    • குமரி மாவட்ட வனப்பகுதியில் மீண்டும் துப்பாக்கி கலாசாரம்
    • கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வனப்பகு தியில் ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்த்தியாக இருப்பதால், வன விலங்குகளும் ஏராளமாக உள்ளன. இவற்றை யாரும் வேட்டையாடாமல் இருக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஆரல்வாய்மொழி வடக்கூர் அருகே உள்ள காற்றாலை மைதானத்தில் மிளா இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பூதப்பாண்டி வன சரகர் ரவீந்திரன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அங்கு 3 வயது மிளா, துப்பாக்கி குண்டு பட்டு இறந்து கிடந்தது. இதனை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழக்குடி பகுதியில் நாட்டு வெடிகுண்டு மூலம் மிளா கொல்லப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு மிளா துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரிய வகை உயிரினங்கள் உள்ள குமரி வன பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டு வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டது. வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த கடுமை யான நடவடிக்கை யால் வேட்டை கட்டுப் படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தான் தற்போது பூதப்பாண்டி வன சரக பகுதியான ஆரல்வாய்மொழியில் மெல்ல மெல்ல துப்பாக்கி சத்தம் கேட்கத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மீண்டும் துப்பாக்கி கலாசாரம் தொடங்கி விட்டதோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் துப்பாக்கியோடு வேட்டை யாடும் கும்பல் பற்றி எந்த தகவலும் வனத்துறைக்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவம் வனத்துறையினர் சமூக ஆர்வலர்கள் இடையே மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    குண்டடி பட்டு இறந்த மிளாவை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அதன் உடலில் இருந்து மீட்கப்பட்ட தோட் டாக்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும், காவல் துறையினரும் இணைந்து துப்பாக்கி கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் இல்லை யென்றால் குமரி வனப் பகுதிகளில் உள்ள வன உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியக்கூடிய சூழல் உருவாகும் என பலரும் வேதனை தெரி வித்துள்ளனர்.

    ×