search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹஜ் புனித பயணம்"

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலிக் சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார்.
    • புனித பயணம் மூலம் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற முயற்சி செய்கின்றேன்.

    இந்திய மகளிர் டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்த சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தார்.

    பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சானியா மிர்சா கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலிக் சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார்.


    இதன் மூலம் மனதளவில் சானியா மிர்சா பெருமளவில் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய குழந்தைகள் பார்த்துக் கொள்வது தமது பணி என்று சானியா மிர்சா கூறியிருந்தார். இந்த நிலையில் சானியா மிர்சா எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    அதில் என்னை விரும்பும் நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்ல நான் ஆசைப்படுகின்றேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த புனித பயணம் மூலம் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற முயற்சி செய்கின்றேன். இந்தத் தருணத்தில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தாலும் உங்கள் மனது பாதிக்கும்படி ஏதேனும் செய்திருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் ஆன்மீகப் பயணத்தை நான் மீண்டும் கொண்டு வர முயற்சி செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு என் இதயம் நன்றி உணர்வுடன் இருக்கின்றது. என்னுடைய பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் செவி சாய்த்து என்னை ஆசிர்வதிக்கப்பட்ட பாதையில் வழிநடத்த வேண்டுகின்றேன். இந்தப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.
    • 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து மெக்காவை அடைந்தார்.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியை சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர் (வயது 29). இவர் நடந்தே மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் செல்ல முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.

    இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஷிஹாப் சோட்டூர் பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து இறுதியில் சவூதி அரேபியாவை அடைந்துள்ளார். கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் குவைத்தில் இருந்து சவூதி அரேபிய எல்லைக்குள் நுழைந்த அவர், அதன் பிறகு முஸ்லிம்களின் புனிதத் தலமான மதீனாவுக்கு சென்றார். அங்கு 21 நாட்கள் தங்கி இருந்தார்.

    அதன்பிறகு மெக்காவுக்கு புறப்பட்டார். மதீனாவிற்கும் மெக்காவிற்கும் இடையிலான 440 கி.மீ. தூரத்தை ஷிஹாப் 9 நாட்களில் கடந்துள்ளார். மெக்காவுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்பது ஷிஹாப்பின் சிறு வயது கனவு என்றும், இதற்காக நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. அவர் நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    அவர் 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து தற்போது முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவை அடைந்தார். இவர் தன்னுடைய மெக்கா புனித பயணம் குறித்த வீடியோ பதிவுகளை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்தார்.

    இதன்மூலம் மெக்காவுக்கு நடந்தே சென்ற சாதனைப் பட்டியலில் ஷிஹாப் இடம்பிடித்துள்ளார்.

    • மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • 56 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    திருப்பூா் :

    தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும்முழு உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மாவட்டத் தலைநகரங்களில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம் அவிநாசி சாலையில் பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தாய் சேய் நல விடுதியில் தொடங்கியது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் ஜெகதீஷ்குமாா் மேற்பாா்வையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 56 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் முகாமில் 62 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹஜ் சா்வீஸ் சொசைட்டியின் திருப்பூா் மாவட்ட உறுப்பினா்கள் சபியுல்லா, சையது ஆதில், சைபுதீன், முகமது ஆரிப் உள்ளிடடோா் செய்திருந்தனா்.

    ×