என் மலர்
நீங்கள் தேடியது "அகோரி"
- இறந்து போன மணிகண்டனுக்கு, திருச்சியை சேர்ந்த அகோரியான மணிகண்டன் என்பவர் நண்பராக இருந்துள்ளார்.
- இறந்து போனவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி பூஜை செய்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
சூலூர்:
சூலூர் அருகே குரும்பபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் 8 வருடங்களுக்கு முன்பு சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணியாற்றும், பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனால் அவர் தனது மனைவியை பிரிந்து அந்த பெண்ணுடன் வாழ தொடங்கி விட்டார். இது தொடர்பாக மணிகண்டன் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும், அவர் மனைவியுடன் செல்லாமல், அந்த பெண்ணுடனேயே வாழ்ந்து வந்தார்.
கடந்த 27-ந் தேதி மணிகண்டனுக்கும், அவருடன் இந்த பெண்ணுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை எரியூட்டுவதற்காக சூலூர் மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே இறந்து போன மணிகண்டனுக்கு, திருச்சியை சேர்ந்த அகோரியான மணிகண்டன் என்பவர் நண்பராக இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மணிகண்டன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்கிருந்து தனது சீடர்களுடன் புறப்பட்டு கோவை சூலூருக்கு வந்தார்.
பின்னர் மின் மயானத்திற்கு வந்த அவர், இறந்து போன உடலுக்கு மரியாதைகள் செலுத்தி பூஜை செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து இறந்த மணிகண்டன் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அகோரி அவரது உடல் மீது ஏறி அமர்ந்து தியானம் செய்தார்.இந்த பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மணிகண்டன் உடல் எரியூட்டப்பட்டது. இறந்து போனவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி பூஜை செய்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
- பாஸ்கரன் என்பவர் கடந்த, 2017ல் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
- அனுப்பர்பாளையம் போலீஸ் ஏட்டு காளியப்பன், பல இடங்களில் தொடர்ந்து தேடி வந்தார்.
திருப்பூர்:
திருப்பூர், சின்னபொம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (60). கடந்த, 2003ல், இவரது வீட்டுக்குள் நுழைந்த, ஏழு பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களை காட்டி மிரட்டி, 42 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணையில், திருவாரூரை சேர்ந்த பாஸ்கரன், 47 என்பவர் மட்டும் கடந்த, 2017ல் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், அனுப்பர்பாளையம் போலீஸ் ஏட்டு காளியப்பன், பல இடங்களில் தொடர்ந்து தேடி வந்தார். இந்தநிலையில் பாஸ்கரன் திருப்பூரில் நடமாடுவது குறித்து தெரிந்தது. அவரை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கண்காணித்து வந்தார்.
அப்போது புஷ்பா சந்திப்பில், போலீசை பார்த்ததும், பாஸ்கரன் தப்பி ஓடினார். ஆனால், ஏட்டு விரட்டி சென்று பாஸ்கரனை மடக்கி பிடித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது போலீசில் சிக்காமல் இருப்பதற்காக ஏழு ஆண்டுகளாக அகோரியாக மாறி திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். இதனையடுத்து பாஸ்கரனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மகா கும்பமேளாவுக்கு சென்ற உறவினர்கள், எங்கள் தந்தை போல் இருக்கும் ஒரு அகோரியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
- என் கணவர் கங்காசாகர் கடந்த 1998-ம் ஆண்டு எங்களை விட்டு சென்றபோது நான் கருவுற்றிருந்தேன்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் புலி பகுதியை சேர்ந்தவர் கங்காசாகர் யாதவ் (65).
கடந்த 27 ஆண்டுக்கு முன்னர் அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கங்காசாகரை அவரது குடும்பத்தினர் கண்டு பிடித்துள்ளனர். அவர் தற்போது அகோரி சாதுவாக சாத்வியுடன் வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு தன்வா தேவி என்ற மனைவி, விமலேஷ், கமலேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
இதுகுறித்து விமலேஷ் கூறியதாவது:-
மகா கும்பமேளாவுக்கு சென்ற உறவினர்கள், எங்கள் தந்தை போல் இருக்கும் ஒரு அகோரியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அவரது புகைப்படத்தையும் அனுப்பினர். பின்னர் அம்மா, தம்பி மற்றும் உறவினர்களுடன் கும்பமேளா பகுதிக்கு சென்று தேடினோம். ஒரு வழியாக அவரை கண்டு பிடித்தோம். அவர்தான் எங்கள் தந்தை என்பதை அம்மாவும் உறுதியாக கூறுகிறார். ஆனால், வீட்டுக்கு அழைத்தால் வர மறுக்கிறார். எங்களை அடையாளம் தெரியாதது போல் நடந்து கொள்கிறார். மகா கும்பமேளா முடிந்த பிறகு எங்கள் தந்தையை மீட்க, மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதுகுறித்து தன்பாத் போலீஸ் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.
தற்போது கங்காசாகர் அகோரி சாதுவாக வாழ்கிறார். அவருடைய பெயர் பாபா ராஜ்குமார் அகோரி என்கிறார். மனைவி தன்வா தேவி உட்பட உறவினர்கள் யாரையும் தெரியாது என்கிறார்.
ஆனால் அவருடைய நீள பற்கள், நெற்றியில் தழும்பு போன்ற அடையாளங்களை வைத்து கங்காசாகர் தான் என்று உறவினர்கள் உறுதியாக கூறுகின்றனர். இதுகுறித்து தன்வா தேவி கூறியதாவது:-
என் கணவர் கங்காசாகர் கடந்த 1998-ம் ஆண்டு எங்களை விட்டு சென்றபோது நான் கருவுற்றிருந்தேன். அப்போது மூத்த மகனுக்கு 2 வயதுதான். அவரைப் பார்த்ததும் நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஆனால், அவர் தெரியாதது போல் நடிக்கிறார் என்றார். இந்நிலையில், தன்வா தேவி, மகன்கள், உறவினர்கள் பலர் மகா கும்பமேளா பகுதியிலேயே முகாம்களில் தங்கி உள்ளனர். அவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளனர்.