search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி மோசடி வழக்கு"

    • மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • நியோ மேக்ஸ் நிதி மோசடி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.

    இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 35க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, " நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், இந்த வழக்கில் என்ன தான் நடக்கிறது. இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து, அக்டோபர் 19ம் தேதிக்குள் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து, அவற்றை முடக்கி அரசாணை வெளியிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதி பரத சக்கதரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 12.5 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்
    • 12.5 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ஆகும்

    வியட்நாம் நாட்டில் 12.5 பில்லியன் டாலர் நிதி மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    12.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி) என்பது வியட்நாம் நாட்டின் 2022 ஜிடிபியில் கிட்டத்தட்ட 3% ஆகும்.

    2012 முதல் 2022 வரை சைகோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியை அவர் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, ஆயிரக்கணக்கான போலியான நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமாகவும் இந்த நிதி மோசடியை அவர் செய்துள்ளார் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது

    இந்த வழக்கை தெற்கு வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வியட்நாமில் நடைபெற்று வரும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீவிரமடைந்த நிலையில் தான் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இவரின் கைதை அடுத்து அப்போது ஜனாதிபதி பதவியில் இருந்த வோ வான் துவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஊழல்களால் வியட்நாமில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,300 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அந்நாட்டின் சந்தையில் இருந்து விலகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுரேஷ் பாபுவின் மனைவி நஸ்ரத். கணவர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.யாக இருப்பதால் அரசாங்கத்தில் பலரை தெரியும் என அந்த பகுதி மக்களிடம் கூறியுள்ளார்.
    • நஸ்ரத்திடம் பணம் மற்றும் நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள், இது தொடர்பாக மலப்புரம் போலீசில் புகார் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் திருச்சூர் கூட்டுறவு துறையின் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் பாபு.

    சுரேஷ் பாபுவின் மனைவி நஸ்ரத். கணவர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.யாக இருப்பதால் அரசாங்கத்தில் பலரை தெரியும் என அந்த பகுதி மக்களிடம் கூறியுள்ளார். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி பலர், அவரிடம் பணம் கொடுத்தனர். அவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி வந்த நஸ்ரத், பணம் வாங்கி பல நாட்கள் ஆனபின்பும் கூறியபடி வேலை வாங்கி கொடுக்க வில்லை. இது போல சிலரிடம் தங்க நகைகளையும் வாங்கி ஏமாற்றி உள்ளார்.

    நஸ்ரத்திடம் பணம் மற்றும் நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள், இது தொடர்பாக மலப்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நஸ்ரத் மீது 9 வழக்குகள் பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நஸ்ரத், திருச்சூரில் உள்ள செர்புவில், கணவர் சுரேஷ்பாபுவின் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், நஸ்ரத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×