என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "நவாஸ் கனி"
- காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண்.
- தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தொடர்பாக விரைவில் சுமூக முடிவு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் எம்.பி.யும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது.,
திராவிட மாடல் நல்லாட்சியின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் மகிழ்கிறேன்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தங்களது மேலான கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.
அங்கு அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு உட்பட்டது என்ற வகையில், வக்ஃபு வாரிய தலைவர் என்ற முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மதுரை சுற்றுவட்டார பகுதி அனைத்து தரப்பட்ட மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வெளியூர்களில் இருந்து அரசியல் செய்யும் நோக்கத்தோடு செல்லும் ஒரு சில அரசியல் கட்சியினரினால் தான் அங்கு தேவையற்ற பதற்றமும் அமைதியின்மையும் பிரச்சனையும் ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அங்கு அமைந்துள்ள கோவில் நிர்வாகத்தினர், இந்து அறநிலையத்துறை, தர்கா நிர்வாகத்தினர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், அரசு வருவாய் துறை ஆகியோர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் இக்குழுவோடு உரிய ஆலோசனை செய்து, விரிவான ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு சுமூகமான முடிவு, நிரந்தர தீர்வு எட்டப்பட வழிவகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண், அதுவும் குறிப்பாக மதுரையை உள்ளடக்கிய தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமான மண்.
எனவே இதன் அமைதியை கெடுக்க நினைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சுமுகமான முடிவை விரைந்து எடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்
- தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சட்டை துரைமுருகன் பேசியுள்ளார்
5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் வழக்கறிஞர் யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "நவாஸ் கனியை வெற்றி பெற வைக்க இராமநாதபுரம் கோபாலபட்டினம் பகுதி ஜமாத், ரூ.10 லட்சம் வழங்கியதாக' பேசியுள்ளார்.
அதாவது, தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.
அந்த நோட்டீசில், "சாட்டை துரை முருகன் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், தன்னுடைய நற்பெயருக்கும் கூட்டணி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது. ஆகவே சாட்டை துரைமுருகன் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
இந்த நோட்டீஸ் தொடர்பாக சாட்டை துரைமுருகன் பதில் அளிக்காத பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று நவாஸ் கனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- கடந்த தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்றும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக நவாஸ் கனி எம்.பி. குற்றம் சாட்டினார்.
- பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருவதாக கூறினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டது. அதனை நவாஸ் கனி எம்.பி. தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
முன்னதாக நெல்மடூர் ஊராட்சி மன்றத்தலைவி சுகன்யா சதீஷ் சால்வை அணிவித்து வரவேற்று பேசினார். பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதைத்தொடர்ந்து நவாஸ்கனி எம்.பி. பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சரின் வீடுகளில் வரு மான வரித்துறை சோதனை நடந்தது. பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருகிறது.
கொங்கு மண்டலத்தில் தி.மு.க. வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.கவை எப்படியாவது ஒடுக்கி விடலாம் என நினைத்து இதுபோன்ற செயலை பா.ஜ.க. செய்து வருகிறது. இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பயப்பட மாட்டோம்.
கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும் நபராக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.