என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவாஸ் கனி"
- சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்
- தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சட்டை துரைமுருகன் பேசியுள்ளார்
5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் வழக்கறிஞர் யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "நவாஸ் கனியை வெற்றி பெற வைக்க இராமநாதபுரம் கோபாலபட்டினம் பகுதி ஜமாத், ரூ.10 லட்சம் வழங்கியதாக' பேசியுள்ளார்.
அதாவது, தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.
அந்த நோட்டீசில், "சாட்டை துரை முருகன் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், தன்னுடைய நற்பெயருக்கும் கூட்டணி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது. ஆகவே சாட்டை துரைமுருகன் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
இந்த நோட்டீஸ் தொடர்பாக சாட்டை துரைமுருகன் பதில் அளிக்காத பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று நவாஸ் கனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- கடந்த தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்றும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக நவாஸ் கனி எம்.பி. குற்றம் சாட்டினார்.
- பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருவதாக கூறினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டது. அதனை நவாஸ் கனி எம்.பி. தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
முன்னதாக நெல்மடூர் ஊராட்சி மன்றத்தலைவி சுகன்யா சதீஷ் சால்வை அணிவித்து வரவேற்று பேசினார். பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதைத்தொடர்ந்து நவாஸ்கனி எம்.பி. பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சரின் வீடுகளில் வரு மான வரித்துறை சோதனை நடந்தது. பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருகிறது.
கொங்கு மண்டலத்தில் தி.மு.க. வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.கவை எப்படியாவது ஒடுக்கி விடலாம் என நினைத்து இதுபோன்ற செயலை பா.ஜ.க. செய்து வருகிறது. இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பயப்பட மாட்டோம்.
கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும் நபராக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்