என் மலர்
நீங்கள் தேடியது "அரபிக்கடல்"
- எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அரபிக்கடல் முழுவதையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
- துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அரபிக்கடல் முழுவதையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
மேலும், மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய கடற்படை அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.
அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்
- வருகிற 7-ந்தேதி வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து இந்த போர் ஒத்திகை பயிற்சி நடைபெறும்.
காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு வகையில் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் வகையில் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதை இந்திய ராணுவ உளவுத்துறை உறுதி செய்தது.
இதையடுத்து பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கு இந்தியா முப்படைகளையும் தயார் படுத்தி வருகிறது. அதோடு பாகிஸ்தானுக்கும் பல்வேறு நெருக்கடிகளை இந்தியா ஏற்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக பாகிஸ்தானியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய மத்திய அரசு சிந்து நதிநீரை முழுமையாக தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நிதி உதவிகளை தடுத்து நிறுத்தவும் இந்தியா முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் வர்த்தக கப்பல் கள் இந்தியாவுக்குள் வருவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு சம்மட்டி அடி ஏற்படுத்தும் வகையில் மாறி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய முப்படைகளும் வகையில் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த ஆய்வு செய்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடைேய கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்க செய்யும் வகை யில் எல்லைக்கட்டுப் பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தினமும் இரவு துப்பாக்கியால் சுட்டப்படி உள்ளனர். நேற்று இரவு 10-வது நாளாக பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அவர்களுக்கு இந்திய தரப்பில் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நீண்ட நாள் விடுப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் ஆயுதங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவில் இந்திய போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகளும் அந்த நகரில் உள்ள ஆயுத தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு விடுமுறை நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியா முழுவதும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் உருவானபோது அரபிக் கடலில் அக்ரான் என்ற பெயரில் போர் பயிற்சிகள் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் திடீர் பயிற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளன. நேற்று அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் இந்திய போர் கப்பல்கள் அணிவகுத்து போர் பயிற்சியை தொடங்கின.
இந்த போர் பயிற்சி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து கடற்படை தளபதி நேற்று நீண்ட விளக்கம் அளித்துள்ளார். எனவே தற்போது அரபிக் கடலில் நடந்து வரும் இந்திய போர் கப்பல்களின் போர் ஒத்திகை பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வருகிற 7-ந்தேதி வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து இந்த போர் ஒத்திகை பயிற்சி நடைபெறும் என்று இந்திய கடற்படை அறிவித்துள்ளது. போர் ஒத்திகை எப்படி நடக்கிறது என்கிற தகவல் கள் வெளியிடப்படவில்லை.
என்றாலும் இந்திய கடற்படை கப்பல்கள் நீண்டதூர தாக்குதலுக்கு தங்களை தயார்ப்படுத்தும் வகையில் பயிற்சி நடப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட இலக்குகளை மிக மிக துல்லியமாக தாக்கும் பயிற்சிகளும் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்திய கடற்படை போன்று வட மண்டலத்தில் இந்திய விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதட்டம் தொடர்ந்து நீடித்தப்படி உள்ளது.
எனவே இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் கூறியபடி உள்ளது. கடந்த 2 தினங்களாக பாகிஸ்தான் ராணு வத்தினர் அதிகளவு ராடார் கருவிகளை எல்லைப் பகுதிகளுக்கு கொண்டு வந்து குவித்துள்ளனர்.
குறிப்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஊடுருவும் என்று எதிர்பார்த்து பல இடங்க ளில் பாகிஸ்தான் போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பல்வேறு நாட்டு தலைவர்களிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தன்னிலை விளக்கம் அளித்து வருகிறது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலை விசாரணைக்கு தயார் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண் டும் என்று பாகிஸ்தான் தரப்பில் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- எல்லையில் “அக்ரான்” என்ற தீவிர போர் பயிற்சி நடந்து வருகிறது.
- பயிற்சிகள் இன்று மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.
ஸ்ரீநகர்:
இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி இன்று (வெள்ளிக்கிழமை) காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்றார். அங்கு ராணுவ மூத்த தளபதிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
உதம்பூர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களுக்கு சென்று இந்திய ராணுவ வீரர்கள் எத்தகைய தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தார். இந்திய ராணுவத்தின் எல்லை பகுதி போர் பயிற்சி முறைகளையும் கேட்டு அறிந்தார்.
ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பார்வை யிட்ட அவர் எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வகையில் வீரர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அனந்த்நாக் மாவட்டத்துக்கும் அவர் சென்றார். அங்கும் ராணுவ படை வீரர்கள் தயாராக இருப்பதை ஆய்வு செய்தார். இன்று பிற்பகல் அவர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகல்காம் பகுதிக்கும் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
பகல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்தி ருக்கும் சூழலில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதியின் ஸ்ரீநகர் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
பாகிஸ்தான் மீது தாக்கு தல் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த முறை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின.
இந்த தடவையும் அதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு எல்லையில் "அக்ரான்" என்ற தீவிர போர் பயிற்சி நடந்து வருகிறது. இது பாகிஸ்தான் எல்லை பகுதியில் மிகப்பெரிய பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
இதற்கிடையே இந்திய கடற்படையையும் தயார் படுத்தி வருகிறார்கள். இந்தியாவின் மேற்கு மண்டலத்தில் உள்ள கடற்படை கப்பல் தளங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தியா வின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல்களில் ஒன் றான ஐ.என்.எஸ். விக்ரந்த் கப்பல் அரபிக் கடல் நோக்கி பயணிப்பது செயற்கை கோள் படங்கள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டு செல்லும் போர் விமானங்கள் பாகிஸ்தானின் எந்த பகுதிக்கும் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றவை. எனவே ஐ.என்.எஸ். விக்ரந்த் போர் கப்பலின் நகர்வு முக்கிய மானதாக கருதப்படுகிறது.
ஆனால் இது வழக்கமான நகர்வுதான் என்று கடற்படை அறிவித்துள்ளது. இதற்கிடையே அக்ரான் என்ற பெயரில் இந்திய விமானப்படை நடத்தி வரும் பயிற்சிகள் இன்று மேலும் தீவிரப்படுத்தப் பட்டன.
இன்று காலை அக்ரான் போர் பயிற்சிகள் மிக தீவிர மாக நடத்தப்பட்டன. இது மேலும் பதட்டத்தை உரு வாக்கி இருக்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம்.
- அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே மாதம் முடிந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. கோடை முடிந்து எப்போதும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 5-ந்தேதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9- ந்தேதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி தற்போது கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- அக்னி வெயில் முடிவடைந்த பின்னரும் கோடை வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தியது.
- குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மைய தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்ததும் ஜூன் முதல் தேதியே தென் மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அக்கினி வெயில் முடிவடைந்த பின்னரும் கோடை வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தியது.
இதனால் தென்மேற்கு பருவமழை தள்ளிப்போகும் நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது.
அதன்படி ஜூன் 8-ந் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் லட்சத்தீவு, நிக்கோபார், அரபிக்கடலில் காற்று வீசுவதில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இன்று தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதன்மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது.
- அரபி கடலில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தாமதமான நிலையில் இப்போது அரபிக்கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு பைப்போர்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்கதேச மாநிலம் வழங்கி உள்ளது. பிபோர்ஜாய் என்றால் பேராபத்து என்று பொருள்.
தற்போது அரபிக்கடலில் உருவாகி உள்ள பிபோர்ஜாய் புயலானது வடக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அதன்படி இந்த புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடைந்து வலுவானதாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த புயல் கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் கோவாவுக்கு மேற்கு, தென்மேற்கே 920 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தரில் இருந்து தென்-தென் மேற்கே 1130 கிலோ மீட்டர் தொலைவிலும் போர்பந்தருக்கு தெற்கில் 1430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பிபோர்ஜாய் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக தீவிரம் அடைந்து கிழக்கு மத்திய அரபி கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான அரபிக் கடல் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அப்போது அரபி கடலில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன்காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
- மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
- இந்தியா வந்த சரக்கு கப்பல் மீது அரபிக்கடலில் வைத்து டிரோன் தாக்குதல்.
- இதனால் பாதுகாப்பு பணியில் 3 போர்க்கப்பல்களை இந்தியா அப்பகுதியில் நிறுத்தியுள்ளது.
அரபிக் கடலில் லைபீரிய நாட்டு எண்ணெய் கப்பல் எம்.வி. கெம்புளூட்டோ மீது கடந்த 23-ந்தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கடந்த 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தது.
இதேபோன்று செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் மீது 23-ந்தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் இந்திய எல்லையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மோர்முகாவோ, ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
தொலைதூர கண்காணிப்புக்கு அதிநவீன பி-81 என்ற ரோந்து விமானத்தையும் இந்திய விமானப்படை ஈடுபடுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த 23-ந்தேதி தாக்குதலுக்கு உள்ளான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் நேற்று மும்பை துறைமுகம் வந்தடைந்தது. இந்திய கடற்படையின் வெடிகுண்டு நிபுணர் குழு அந்தக் கப்பலை ஆய்வு செய்தது.