என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் கடையில்"

    • மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சிறுவல்லூர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மூபன்சாலை பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது .

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வாசு (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×