என் மலர்
நீங்கள் தேடியது "நக்சலைட்டு"
- பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அவ்வப்போது என்கவுன்டர் நடைபெறுகிறது.
- இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லாபால் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
- மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
- நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் தேகமேடா மலைப் பகுதி அருகே இன்று காலை 10.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
நக்சலைட்டுகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 2 ராணுவ வீரர்களும் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
- ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.
திருப்பதி:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பந்த் நடைபெறும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால் மாநில அரசு வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் வாகனங்கள் இயங்கும் என அறிவித்தது. இதனால் நக்சலைட்டுகள் தங்களது பலத்தைக் காட்ட முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம், கன்னவரம் பகுதியில் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தீஸ்கர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 20-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பஸ்சை தடுத்து நிறுத்தினா்.
பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், ஆசிரி கூடேம், குந்தா என்ற இடத்தில் ஜக்தல்பூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற அரசு பஸ்சை மடக்கினர். பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்து எரித்தனர்.
அந்த வழியாக வந்த மேலும் 2 லாரிகள், 1 காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.