என் மலர்
நீங்கள் தேடியது "சி.சி.டிவி கேமிரா"
- குழந்தைகள் விடுதிகள் உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன.
- அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதிகளை நடத்த வேண்டும்.
கடலூர்:
தமிழ்நாடு சிறார் மற்றும் பெண்களுக்கான வீடுகள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி க்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
இச்சட்டத்தின்படி தனியாரால் நடத்தப்படும் குழந்தைகள் விடுதிகள் உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அனைத்து தனியார் குழந்தைகள் விடுதிகள் பதிவு பெற உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 18 தனியார் குழந்தைகள் விடுதிகள் தவிர வேறு எவரும் உரிமம் பெற கடலூர் மாவட்ட கலெக்டரை அணுகவில்லை. தற்போது தனியார் குழந்தைகள் விடுதிகள் சுகாதாரமற்ற முறையில் இயங்குவதாகவும், விடுதியில் தங்கியுள்ள வர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் பல விடுதிகள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் சேர்க்கை முறையாக பதிவு செய்யாமல் இருப்பதும் தெரியவந்தது. முறையாக உரிமம் பெறாமல் இயங்கிவரும் விடுதிகள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரிதநட வடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான வீடுகள் மற்றும் விடுதிகள் முறைபடுத்துதல், குழந்தைகள் விடுதிகளை நடத்திட விடுதி உரிமையாளர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விடுதியின் உரிமம் பெற, தீயணைப்பு சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், கட்டிடம் உறுதித்தன்மை சான்று ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதிகளை நடத்த வேண்டும். விடுதியில் சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். விடுதி மேலாளர் மற்றும் விடுதி பாதுகாவலர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பதிவுபெற்ற மருத்துவர் மூலம் உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். ஒருவர் விடுதியில் தங்குவதற்கு சராசரியாக 40 சதுர அடி இடத்தினை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். மேலும் தனிக்குடும்பமாக வசிப்பதற்கென்று உள்ள தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் எந்த உரிமமும் பெறாமல் விடுதியாக உரிய உரிமம் மற்றும் போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவது கண்டறிய ப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறினார்.