search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "105 அரசு"

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு வருகிறது.
    • காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    ஈரோடு, 

    ஈரோட்டில் அவ்வப்போது வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் புகாரை தொடர்ந்து பஸ்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன தணிக்கை செய்யப்பட்டது.

    சுற்றுச்சூழல் விஞ்ஞானி தனபால், கருணாசாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார், கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர் 105 அரசு மற்றும் தனியார் பஸ்களை சோதனை யிட்டனர்.

    அதில் 40 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர்ஹா ரன்கள்) கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அனைத்து பஸ் டிரைவர்களுக்கும் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என அறிவு றுத்தப்பட்டது. மீண்டும் காற்று ஒலிப்பான் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    ×