search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பர பேனர்கள்"

    • விளம்பர பேனர்கள் அமைப்பதில் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது.
    • கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தடுக்க முடியும்.

    சென்னை:

    விளம்பர பேனர்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் எழுந்துள்ளது. மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விளம்பர பேனர் விழுந்த தில் 14 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையிலும் கடந்த 2019-ம் ஆண்டு விளம்பர பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவத்தால் விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்ததுடன் தீவிரமாக கண்காணிக்கும் படியும் உத்தரவிட்டது.

    இதனால் கொஞ்சம் குறைந்த விளம்பர பேனர்கள் மீண்டும் அதிக ரித்து விட்டன. இது நல்ல வருமானம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் பலர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் செல்வாக்கு இருப்பதால் அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை.

    ெசன்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள எதுவும் முறை யான அனுமதி பெறவில்லை.

    மும்பை சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் அனுமதி இல்லாத விளம்பர பேனர்களை அகற்றும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தர விட்டுள்ளார்.

    விளம்பர பேனர் வைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறியதாவது:-

    விளம்பர பேனர்கள் அமைப்பதில் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது. எவ்வொரு ஏரியாவை பொறுத்தும் வியூவை பொறுத்தும் விளம்பர பேனர் கட்டணங்கள் மாறும். வீடு மற்றும் கட்டட உரிமையாளர்களிடம் பேனர் வைப்பதற்கு அனுமதி பெறுவர்கள் அதற்ேக அட்வான்ஸ் ரூ.5 லட்சம் வரை கொடுக்கி றார்கள்.

    இதுதவிர மாதாந்திர கட்டணமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

    விளம்பரம் செய்ய முன் வரும் நிறுவனங்களிடம் 10 நாள், 15 நாள் ஒரு மாதம் என்ற அடிப்படையில் கட்டணம் பெறுவார்கள்.

    சில இடங்களில் இருபக்கமும் பேனர் வைப்பார்கள். ஆனால் ஒரு பக்கத்துக்கு மட்டும் அனுமதி வாங்கி இருப்பார்கள். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்றார்.

    • சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது

    செங்கம்:

    செங்கம் நகரில் பல்வேறு இடங்களில் போக்கு வரத்திற்கு இடையூறாக விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு விளம்பர பேனர்கள் மீது தடை விதித்துள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி மெயின் ரோடு, போளூர் ரோடு, மில்லத் நகர், மேலப்பாளையம், தாலுகா ஆபிஸ், சார்பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வணிக மற்றும் அரசியல் கட்சி விளம்பரங்கள் விளம்பர பேனர்கள் வைக்கப்ப ட்டுள்ளது.

    இதனால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்துக்கள் ஏற்படும் சூழலும். தமிழக அரசு விளம்பர பேனர்களுக்கு தடை விதித்துள்ளது.

    பேனர்கள் வைத்து சில நாட்காளக பேனர்களை அகற்ற அதிகாரிகள் முன் வரவில்லை எனவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்படும். விளம்பர பேனர்களை கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    எனவே செங்கம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×