என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனம் பூசும்"

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் அடங்கப்பட்டி ருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 849-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா இன்று (12-ந்தேதி) நடை பெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு யானை, குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் விழா நடைபெறுகிறது.

    நாளை அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஏர்வாடி தர்கா பகுதி முழு வதும் பக்தர்கள் கூட்டத்தால் களை கட்டி யுள்ளது. மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்கா விற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. தர்கா வளாகத்தில் கூடுத லாக சிறப்பு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப் படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். சீருடை அணியாத போலீ சார், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

    வருகிற 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியு டன் அன்னதானம் வழங்கப பட்டு விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்துள்ளனர்.

    ×