என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5-ம் வகுப்பு மாணவர்களுக்கு"

    • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விட ப்பட்டது. இதனை யடுத்து மாணவர்கள் கோடை விடுமு றையை கொண்டாடு வதற்காக தங்களது சொந்த ஊர்க ளுக்கும், உறவினர்கள் வீடு களுக்கும் சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்த பின் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாண வர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்த பின்னும் தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்த தால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோ ர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதன்படி பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்க ப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையாமல் வறுத்தெடுத்து வந்ததால் பள்ளி திறப்பை மீண்டும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள், கல்வியா ளர்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

    இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 14-ந் தேதி இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு பள்ளிகள் திறக்க ப்பட்டது. பள்ளி திறப்பை யொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடைவீதிகளில் பெற்றோ ர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகமாக இருந்தது.

    நோட்டு புத்தகம், ஷூ, சாக்ஸ் போன்ற கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரம் பள்ளி திறப்பை யொட்டி பள்ளிக்கல்வி த்துறை சார்பில் அந்தந்த பள்ளிகளில் தூய்மை பணிகள் நடந்து வந்தன.

    பள்ளி வளாகம், வகுப்ப றைகள் தூய்மைப்படு த்தப்பட்டன. பள்ளி திறப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன.

    இந்நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக காலையிலேயே மாணவ ர்கள் குளித்து, பள்ளி சீருடை அணிந்து பெற்றோ ர்களுடன் பள்ளிக்கு கிளம்பி னர்.

    மாணவர்களை வரவேற்கும் விதமாக ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி யில் இன்று காலை புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாண விகளுக்கு ஆசிரி யர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதிய மாணவர்களுக்கு பேன்டு வாத்தியம் முழங்க ஆசிரியர்கள் பூ கொத்து கொடுத்து அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க ப்பட்டது.

    பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். இன்னும் சில பள்ளிகளில் வாழ தோரணங்கள் கட்டப்ப ட்டு பள்ளிகளுக்கு புதிதாக வந்த மாணவர்க ளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் இன்று பள்ளிகளுக்கு வந்தனர். புதிய நண்பர்கள், புதிய சூழல் என மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக ளுக்கு வந்தனர்.

    இதேபோல் யு.கே.ஜி. மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை மாத விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் சில மாணவ-மாணவிகள் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தனர்.

    பள்ளிக்குள் நுழைந்த தும் தாய், தந்தை யை கட்டி அரவணைத்து பள்ளிக்கு செல்ல மா ட்டோம் என்று அழுது அடம் பிடித்தனர். அவர்க ளை ஆசிரியர்கள் சமாதா னப்படுத்தி வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.

    ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் 8,093 மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டது.

    அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயலில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    முதல் நாளான இன்று பொங்கல் சாம்பார் வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 59 பள்ளிகளில் 8,238 மாணவர்களும், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளில் 665 மாணவர்கள் என 97 பள்ளிகளை சேர்ந்த 8903 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

    • அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.
    • தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வித் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு 5, 8-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துள்ளது.

    குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகியுள்ளது.

    புதுச்சேரியிலுள்ள பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளில் மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகியுள்ளது. முதல்முறையாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வுகளையும் புதுவை மாணவர்கள் எழுத உள்ளனர்.

    இந்த நிலையில் கட்டாய தேர்ச்சி ரத்து குறித்து முதலமைச்சர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்தார். இதயைடுத்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுச்சேரி மத்திய அரசின் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் உத்தரவை புதுச்சேரி அரசு ஏற்று செயல்படும். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரும். அதன் அடிப்படையில் தான் மத்திய அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வித் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    ×