search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பன் மீனவர்கள்"

    • அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு.
    • தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சிறைக்காவல் முடிந்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த மாதம் 8ம் தேதி புத்தளம் கடல் பகுதியில் 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது ெசய்தனர்.அத்துடன் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    முன்னதாக, இன்று நடைபெற்ற மற்றொரு விசாரணையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
    • படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில், நான்கு படகுகளுடன் 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 15-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் ஒரு மீனவர் 18 வயதிற்கு குறைவாக இருந்ததால் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மீதமுள்ள 24 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நான்கு படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கியும், சாலை மறியல் செய்தும் போராட்டங்களை மேற் கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு உமா தேவி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனைதொடர்ந்து, அனைத்து நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாம்பன் மீனவர்கள் 25 பேருடன் 4 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற் கொள்ளுவது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் வருகிற 5-ந்தேதி பாம்பன் பேருந்து பாலத்தை முற்றுகையிட்டு பேரணியாக மண்டபம் ரெயில் நிலையத்திற்கு சென்று சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வடக்கு துறை முகத்தில் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு மீனவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்திய மீனவர்கள் என கருதி மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • தடைகாலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க மத்திய-மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தடை காலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். சிலர் குடும்ப சூழ்நிலை கருதி வேறு வேலைகளுக்கும் சென்றனர்.

    இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்று இரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.

    தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என பாம்பன் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ராமேசுவரத்தை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும், இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. எனவே மீன் பிடிப்பதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதன் காரணமாக தடைகாலம் முடிந்த நிலையிலும் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் ராமேசுவரம் மீனவர்களுக்கு இன்று வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனினும் கடல் காற்று குறைந்து 17-ந்தேதி இயல்புநிலை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினத்தில் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×