search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பாப்பே"

    • பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிய நிலையில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார்.
    • இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

    பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன் எம்பாப்பே. இவர் உலகின் தலைசிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, ப்ரீடிரான்ஸ்ஃபர் மூலமாக உலகின் முன்னணி கால்பந்து அணியான ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக UEFA சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அட்லாண்டா அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுதான் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாப்பே களம் இறங்கிய முதல் போட்டியாகும். இந்த போட்டியில் எம்பாப்பே ஒரு கோல் அடித்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

    தற்போது லா லிகா கால்பந்து லீக் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ரியல் மாட்ரிட் ரியல் பெட்டிஸ் அணியை எதிர்கொண்டது.

    இதற்கு முன்னதாக மூன்று போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக எம்பாப்பே களம் இறங்கி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக விமர்சனம் எழும்பியது.

    இந்த நிலையில் ரியல் பெட்டிஸ் அணிக்கெதிராக எம்பாப்பே லா லீகாவில் முதல் கோலை பதிவு செய்தார். 67-வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடித்தார். அத்துடன் 75-வது நிமிடத்தில் பொனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. இதையும் சரியான பயன்படுததி கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.

    லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது. ரியல் மாட்ரிட் 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் டிராவுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடம் வகிக்கிறது.

    • இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது.
    • முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான்.

    பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே. இவர் பாரீஸ் சூப்பர் ஜெய்ன்ட் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியில் இருந்து ப்ரீ டிரான்ஸ்பராக ரியல் மாட்ரிட் அணிக்கு வந்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணியுடன் ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். முதல்முறையாக சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக அட்லாண்டா அணியை எதிர்த்து விளையாடினார்.

    இந்த போட்டியில் 2-0 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 2-வது கோலை எம்பாப்வே அடித்தார். இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்காக அடித்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் எம்பாப்பே "நாங்கள் ரியல் மாட்ரிட். எங்களுக்கு எல்லை கிடையாது. எனக்கும் இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது. என்னால் 50 கோல்கள் அடிக்க முடியும் என்றால், அது 50 ஆக இருக்கும். ஆனால், முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான். ஏனென்றால் நாங்கள் ஒரு அணியாக வெற்றிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய இந்த இரவு (நேற்றிரவு இறுதிப்போட்டி) சிறந்த இரவாக அமைந்தது. ரியல் மாட்ரிட்டி ஜெர்சி அணிந்து விளையாடுவதற்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு சிறந்த தருணம்" என்றார்.

    • ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தார்.
    • எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அண்மையில் ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தது உலக அளவில் பேசுபொருளானது.

    இது தொடர்பாக எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த புகைப்படத்திற்கு ரொனால்டோ பதிவிட்ட கமெண்ட், இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற கமெண்ட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

    அந்த கமெண்டிற்கு 38 லட்சத்திற்கு மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. 

    • பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர், பிரதரை சந்தித்தார்
    • பிரான்சில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்

    பிரதமர் மோடி பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரான்ஸில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார். அப்போது, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வரும் பிரான்ஸ் நாட்டின் எம்பாப்பே குறித்து பேசினார்.

    எம்பாப்வே குறித்து பிரதமர் மோடி கூறுகையில் ''இந்திய இளைஞர்களிடையே எம்பாப்பே சூப்பர் ஹீரோவா திகழ்கிறார். எம்பாப்பே-ஐ அனேகமாக பிரான்சைவிட இந்திய மக்கள் அதிகமானோருக்கு தெரிந்திருக்கலாம்'' என்றார்.

    பிரெஞ்ச் லீக் மற்றும் சர்வதேச போட்டிகளில் எம்பாப்பே அபாரமாக விளையாடி வருகிறார். உலகக்கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினாவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்காவில் பேஸ்பால் போட்டிக்கிடையெ கிரிக்கெட்டும் வளர்ந்து வருகிறது என்றார்.

    • எம்பாப்பே 55-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்
    • 69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்

    ஐரோப்பிய யூனியனில் உள்ள கால்பந்து நாடுகளுக்கு இடையில் தகுதிச்சுற்று நடைபெற்று யூரோ கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டும். 2023-24-ம் ஆண்டு யூரோ கோப்பைக்கான தகுதிக்சுற்று தற்போது நடைபெற்றது வருகிறது.

    இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்- கிரீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கிய வினாடியில் இருந்து இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களை கோல் அடிக்கவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விளையாட முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க திணறினர். இறுதியில் 55-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிலியான் எம்பாப்வே கோல் அடித்தார். ஆகவே, பிரான்ஸ் 55-வது நிமிடம் முடிவில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் மவ்ரோபனாஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் கிரீஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. என்றாலும் பிரான்ஸ் அணியை மேலும் கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது. கிரீஸ் அணியாலும் ஆட்டம் முடியும்வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்றது.

    'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. கிரீஸ் 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    • ஆட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் ஜிராடு கோல் அடித்தார்
    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எம்பாப்பே கோலாக்கினார்

    ஐரோப்பா சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான பிரான்ஸ் ஜிப்ரால்டரை எதிர்கொண்டது. இதில் பிரான்ஸ் 3-0 என வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கிங்ஸ்லி வழங்கிய பந்தை சிறப்பான முறையில் கோலாக்கினார் ஜிராடு. பிரான்ஸ் அணிக்காக அவர் அடித்த 54-வது கோல் இதுவாகும்.

    அதன்பிறகு முதல் பாதிநேரம் ஆட்டம் முடியும் தருவாயில் இருக்கும்போது பெனால்டி வாய்ப்பு மூலம் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக எம்பாப்வே அடித்த கோல்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    2-வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் மேலும் ஒரு கோல் அடிக்க 3-0 என வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற மற்ற ஆடடங்களில் பின்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, உக்ரைன், கிரீஸ், அர்மேனியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், கஜகஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

    'பி' பிரிவில இடம்பிடித்துள்ள பிரான்ஸ் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்று முதல் இடம் வகிக்கிறது.

    ×