என் மலர்
நீங்கள் தேடியது "கல்விக்கொள்கை"
- ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம்.
- இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.
மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
கல்வியில் இருந்து மக்களை நீக்கும் இனைத்து வேலைகளையும் தேசிய கல்விக் கொள்கை செய்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை.
இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர தேசிய கல்விக் கொள்கை மூலம் முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம்.
ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.
ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ?
இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ?
திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது.
- புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.
நாகர்கோவில்:
மாவட்ட அளவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்வளர்த்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படவில்லை, இக்கல்லூரியில் படித்தவர்களுக்கு ஆளுநர் விரைவில் பட்டம் வழங்க வேண்டும்.
இந்திய அளவில் பெண் கல்வி 28 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழகம் 78 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.