search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்-அமைச்சரின்"

    • காலை சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது உணவின் தரம் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலு வலரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநருமான சங்கர் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சேலம் வந்தார்.

    காலை உணவு திட்டம்

    தொடர்ந்து இன்று காலை சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவின் தரம் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அல்லிக்குட்டை ஏரியில் நடைபெற்று வரும் புனர மைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் மேற்கொள்ளப் பட்டுள்ள புனரமைப்பு பணிகள் மற்றும் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆரம்ப சுகாதார நிலையம்

    தொடர்ந்து சேலம் பொன்னம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு அங்கு அளிக்கப்படும் சிகிச்சை கள் குறித்து நோயா ளிகளி டம் கேட்டறிந்தார். அப்போது மருந்து மாத்திரை இருப்பு குறித்தும் கேட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் அதி காரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சங்கர் மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும் இன்று பிற்பகல் வட கிழக்கு பருவ மழையை யொட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணி கள் குறித்தும் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

    ரூ.19 கோடி மதிப்பு

    இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது:-

    கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது குறித்த நேரத்தில் சத்தான உணவுகளை, சுகாதார மான முறையில் சமைத்து வழங்கி வரும் சமைய லர்களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அய்யந்திருமாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மையத்தி னையும், அல்லிக்குட்டை ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனர மைப்பு மற்றும் அழகு படுத்தும் பணிகளை யும், அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நோயாளி களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் இருப்பு போதிய அளவில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் போடிநாயக்கன் பட்டி ஏரியில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணி களும் ஆய்வு செய்யப் பட்டது. சேலம் மாநக ராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலு வலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவா திஸ்ரீ மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

    சேலம்:

    தமிழக அரசின் சார்பில் போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சேலம் மாநகரம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலாவிற்கு அண்ணா விருதுடன், ரூ.10 ஆயிரம் வெகுமதியும், சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதுடன் ரூ.5 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்படுகிறது.

    இதேபோல் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள் முருகன் மற்றும் காளியப்பன் ஆகியோருக்கும் அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

    • மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    நாமக்கல்:

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5- ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகள் மற்றும் 15 வட்டாரத்தில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 773 அரசு பள்ளிகளில் 32 ஆயிரத்து 467 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளன. திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ேதாறும் கிச்சடி, புதன்கிழமை பொங்கல் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து நாட்களும் காய்கறி சாம்பார் வழங்கப்பட உள்ளன. கொல்லிமலையில்உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் கே.மேட்டுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
    • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    கோபி:

    தமிழக முதல்-அமைச்ச ரின் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பொம்ம நாயக்கன் பாளை யம் அடுத்த கே.மேட்டு ப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி யில் நடந்தது. இதில் 1062 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    இந்த முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முன்னதாக கோபிசெட்டி பாளையம் வட்டார சுகா தார மேற் பார்வையாளர் செல்வன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றி னார். பொம்மநாயக்கன் பாளையம் ஊராட்சி முன் னாள் தலைவர் சண்முக த்தரசு முன்னிலை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி உறு ப்பினர் சிவகாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துளசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 67 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, 127 பேருக்கு ஈசிஜி பரிசோதனை, 56பேரு க்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    மேலும் 539 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, 64 பேருக்கு விடிஆர்எல் பரிசோதனை, 890 பேருக்கு சிறுநீரில் உப்பு, சர்க்கரை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் 5 பேர் கண் அறுவை சிகி ச்சைக்கு அனுப்பி வைக்க ப்பட்டனர். காச நோயால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முகாமில் அமைக்கப்பட்ட டெங்கு, தொழு நோய், மக்களை தேடி மருத்துவம், காச நோய், எய்ட்ஸ் கட்டுப் பாடு, ஊட்டச்சத்து கண் காட்சியை ஏ.ஜி.வெங்கடா ச்சலம் எம்.எல்.ஏ. பார்வை யிட்டார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கல்பனா 138 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்தார்.

    கூகலூர் ஆரம்ப சுகா தார நிலைய டாக்டர் 124 பேருக்கு பல் சிகிச்சை அளித்தார். பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மூலம் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தோல் டாக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோபி செட்டிபாளையம் தஷின் மருத்துவ மனை குழுவின ரும், கோபிசெட்டிபாளை யம் எம்.எஸ். மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட த்தின் கீழ் மருத்துவ பரிசோதனை மேற் கொள்ள ப்பட்டது.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற் பார்வை யாளர் செல்வன் தலைமை யில் சுகாதார ஆய்வாளர்கள் சேதுராமன், சுகந்த், வேலு மணி, நவீன்குமார், சிவா, சக்திவேல், கிரண், செவிலி யர்கள் சுலோச்சனா, லதா ராணி உள்பட பலர் செய்திருந்தனர்.

    ×