search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர்கள் கோரிக்கை"

    • தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும்?
    • ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா?

    சென்னை:

    தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறியதாவது:-

    மது வாங்க வருவோர், ஒரு பாட்டில், இரு பாட்டில் என வாங்குவர். மதுக் கூடங்களுக்கு மது அருந்த வருவோர், நேரடியாக மதுக்கூடத்திற்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியரிடம் மது வாங்கி வரச்சொல்லி அனுப்புகின்றனர்.

    அவர்களும் ஒரு மேஜைக்கு இரண்டு, மூன்று பாட்டில் வீதம், 4-5 மேஜைகளுக்கு சேர்த்து, ஒரே சமயத்தில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இது, மது அருந்த வந்தவர்களுக்கு வாங்கப்படுகிறதா? அல்லது பதுக்கி விற்க வாங்கப்படுகிறதா? என்பது, மதுக்கடை ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

    கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கும் போது, போலீசாரிடம் பிடிபட்டு விசாரணையில், 'எங்கிருந்து இவ்வளவு பாட்டில் வந்தது' என்று கேட்டால், ஊழியர்களை கைகாட்டி விடுகின்றனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை டாஸ்மாக் உருவாக்கி, விரைவில் வெளியிட வேண்டும். மதுக்கூடத்தில் பணிபுரிவோருக்கு, 'ஆதார்' உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா? எனவும், டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியிருப்புகள் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும்.
    • பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு புதிய தாக வீடுகள் கட்டித்தர வேண்டும்.

    அரூர், 

    தருமபுரி மாவட்டம், அரூரில் தூய்மைப் பணியாளர்களுக்கான கண்காணிப்பு குழுவின் 2-ம் காலாண்டு ஆய்வுக் கூட்டம், கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் பேசுகையில், அரூர் பேரூரா ட்சிக்கு உள்பட்ட சுடுகாடு மேட்டில் தூய்மைப் பணி யாளர்களின் குடியிப்புகள் உள்ளன.

    இந்த குடியிருப்புகள் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும்.

    இந்த குடியிருப்பு பகுதியில் குடிநீர், தெரு விளக்குகள், சிமெண்ட் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள குடியிரு ப்புகளில் தூய்மைப் பணியா ளர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    எனவே அரூர், கம்பை நல்லூர், கடத்தூர், பொ.மல்லா புரம், பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு புதிய தாக வீடுகள் கட்டித்தர வேண்டும்.

    தூய்மைப் பணி யாளர்களின் குழந்தை களுக்கு கல்விக் கடன்கள், சிறு தொழில் கடன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதில் வட்டாட்சியர்கள் பெருமாள், வள்ளி, தனி வட்டாட்சியர்கள் மில்லர், சின்னா, தூய்மைப் பணியாளர்களின் சங்க பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.

    • கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மேனகா தலைமை வகித்தார்.
    • இம்மாதம் 23 -ந் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் தர்ணா போராட்டம் நடக்கிறது.

    தருமபுரி,

    தமிழ்நாடு ஏஐடியூசி தருமபுரி மாவட்ட ஆஷா பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை விளக்க பேரவை கூட்டம் பெரியார் மன்றத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மேனகா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தீபா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ருக்மணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி,பொருளாளர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

    கூட்டத்தில் சுகாதாரத்துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கிராம செவிலியர்களுக்கு இணையாக பணிபுரியும் ஆஷா பணியாளர்களை சுகாதாரத்துறையில் பணி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் மாதம் ரூ.21000 வழங்க வேண்டும். ஆஷா பணியாளர்களுக்கு சுகாதாரத்துறையில் பணியாளர் அடையாள அட்டை, அரசு பஸ்களில் இலவச பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் இம்மாதம் 23 -ந் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெறும் தர்ணா போராட்டத்திற்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்து எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் உத்ரா, ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×