என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தண்ணீர் குடித்த"
- தண்ணீரை குடித்தவுடன் பழனிசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்து விட்டார்.
- கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனி சாமி (52). இவருக்கு திருமண மாகி 2 மகள்கள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக கடந்த 15 ஆண்டுகளாக பழனிசாமி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பழனிசாமி கடந்த சில ஆண்டுகளாக கருங்கல்பா ளையம், குயிலான் தோப்பு பகுதியில் உள்ள கோசாலை யில் தங்கி மாடுகளை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 11 மணியளவில் தன்னுடன் வேலை பார்க்கும் நபரிடம் வயிறு வலிப்பதாக கூறி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீரை வாங்கி குடித்தவுடன் பழனிசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்துவிட்டார். உடனடியாக 108 ஆம்பு லன்சுக்கு தகவல் தெரி விக்கப்பட்டு மருத்துவக்குழுவினர் வந்து பரிசோ தித்து பார்த்துவிட்டு பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து பழனிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்