என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதாகரன்"

    • கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு காரில் வந்தார்.
    • இந்த வழக்கில் மேலும் சில முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது.

    கடந்த 2017-ல் இங்கு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை 300-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து பலரிடமும் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்துவதற்காக, சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று சுதாகரன் விசாரணைக்கு ஆஜரானார். கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு காரில் வந்தார்.

    பின்னர் அவர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்குள் சென்றார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடநாட்டின் முன்னாள் பங்குதாரர் என்பதால், பங்களாவில் என்னென்ன இருந்தது. கொடநாடு பங்களாவில் கொள்ளை போனது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளையும் கேட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் தனக்கு தெரிந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தார். அதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். இந்த வழக்கில் மேலும் சில முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவின் முன்னாள் வளர்ச்சி மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    வருகிற 27ந்தேதி கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். 

    • சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பழங்கால பொருட்களை விற்பனை செய்து வந்தவர் மோன்சன் மாவுங்கால். இவர் தங்கம் கடத்தல் மற்றும் பழமையான பொருட்கள் விற்பனையில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவர் மீது பாலியல் வழக்கும் இருந்தது. இந்த வழக்கில் மோன்சன் மாவுங்காலுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் மோன்சன் மாவுங்காலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர், கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

    இந்நிலையில் நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

    அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், நான் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. கோர்ட்டில் வழக்கை சந்திப்பேன். நான் பயப்படவோ ஒளிந்து கொள்ளவோ போவதில்லை என்றார்.

    இந்நிலையில் சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் 2 நாட்கள் கருப்பு தினம் கடைபிடிப்பதாகவும் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது அரசியல் கட்சிகளுக்கு எதிராக கேரள அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக கூறி பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

    • வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுதாகரனை போலீசார் திடீரென கைது செய்தனர்.
    • பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் போலி புராதனப்பொருட்கள் விற்பனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மோன் சன் மாவுங்கல் என்பவருடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுதாகரனை போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    சுதாகரன் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். மேலும் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரம் தலைமை செயலகம் உள்பட பல்வேறு இடங்களில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த சம்பவங்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
    • ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் சமீபத்தில் போலி புராதன பொருட்கள் விற்பனை மோசடியில் கைதானவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர். மேலும் சுதாகரனை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கட்சியினர் பலமுறை திட்டமிட்டதாக காங்கிரஸ் பிரமுகர் சக்திதரன் என்பவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை காங்கிரஸ் தலைவர் சுதாகரனும் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 6 முறை என்னை கொல்ல நேரடியாக முயற்சித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.

    • தன்னை போன்ற நிர்வாகியே, ராகுல் காந்தியை அணுக முடியாத நிலையில், சாதாரண மக்கள் எப்படி அவரை அணுக முடியும்.
    • கேரள அரசியலில் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் 2-வது கட்டமாக நடக்கிறது. அங்கு வருகிற 26-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக வயநாடு மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சுதாகரன், திடீரென காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியை மையமாக கொண்ட அரசியல் பார்வையில் தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, இந்த சகாப்தத்திற்கு மிகவும் பொருத்தமான கட்சியாக இருப்பதால், பாரதிய ஜனதாவில் இணைந்ததாக சுதாகரன் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை போன்ற நிர்வாகியே, ராகுல் காந்தியை அணுக முடியாத நிலையில், சாதாரண மக்கள் எப்படி அவரை அணுக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான கருணாகரனின் மகள் பத்மஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். தற்போது மாவட்ட செயலாளரும் பா.ஜனதாவில் இணைந்திருப்பது கேரள அரசியலில் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

    ×