search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "க்கள்"

    • திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது.
    • பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை.

    விழுப்புரம்:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் விழுப்புரத்திற்கு இன்று வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது. இதற்கு உதாரணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழக அமைச்சர்கள் 33 பேர் ஒவ்வொரு தெருவிலும் சூழ்ந்து கொண்டு மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து அவர்களை மாலையில் விடுவிக்கின்றனர்.

    இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் அவலமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கின்றது. இதையெல்லாம் முன்பே உணர்ந்துதான் அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பூக்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
    • 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசபட்டி, வலையங்குளம், தும்பக்குளம், கப்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இந்தப்பகுதி யில் மல்லிகை, பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்றவை பயிரிடப்படுகிறது. இந்த மாதம் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திரு விழாக்கள் நடத்துவது வெகுவாக குறைந்துள்ள தால் பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

    மல்லிகை, முல்லைப்பூ ஆகியவற்றை பறிப்பதற்கு ஒருநாள் கூலி ரூ.150 வழங்கப்படுகிறது. ஆனால் பூக்களின் விலை ரூ.100-க்கு விற்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தோட்டத்தில் உள்ள செடிகளில் பூக்கள் பறிக்கப்படாமல் உள்ளது.

    லட்சக்கணக்கில் செலவழித்து பூ சாகுபடி செய்த விவசாயிகள் விலை சரிவால் வேதனைய டைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் வாசனை திரவியம் ஆலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×