என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. வேட்பாளர்கள்"

    • பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தி.மு.க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திட்டக்குழு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரவிகுமார், முஸ்தபா, ஜார்ஜ், ராமசாமி, ராஜேந்திரன், பாபு, விசாலாட்சி ஆகியோரும், ஏற்கனவே மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக உள்ள பொன்தோஸ், உமாராஜன், வனஜா, மீனா, சசிகலா, அனீபா ஆகியோர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றதை தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்கிடம் வாழ்த்து பெற்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத் துல்லா, தொரை, பில்லன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், இஸ்மாயில், மணிகண்டன், ஊட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் ரவி, ரீட்டாமேரி, ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், நாகமணி, கீதா, மேரி பிளோ ரினா, பிரியா வினோதினி, திவ்யா, அனிதா லட்சுமி, பிளோரினா, மீனா, ஜாகீர்உசேன், மன்சூர், கோபி, சாந்தாசந்திரன், வசந்தி, சுசிலா, சித்ரா, பாக்கியவதி, சமீனா மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×