என் மலர்
நீங்கள் தேடியது "தந்தை மகள்"
- கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.
- வீடியோ 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது.
தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பு தனித்துவமானது அதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். மகளை ஆச்சர்யப்படுத்துவதற்காக ஸ்ருத்வா தேசாயின் தந்தை இந்தியாவில் இருந்து கனடா வரை பயணம் செய்துள்ளார். ஸ்ருத்வா தேசாய் வேலை பார்க்கும் கடைக்கு திடீரென அவரது தந்தை சென்றதும் ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்ற ஸ்ருத்வா தேசாய் தனது தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளும், அவர் ஆனந்த கண்ணீரில் மூழ்கிய காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் இந்த காட்சி கண்களை ஈரமாக்குகிறது. எந்த தந்தையும் தன் மகளை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் இந்த வீடியோ மிகவும் தூய்மையானது எனவும் பதிவிட்டுள்ளார்.
- நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
- விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் வாழ்ந்து வந்ததார்
கணவனை இழந்து விதவையான பெண்கள் தங்களின் தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது வேலைக்கு உரிமை கோரலாம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
'பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்தில் பொது மேலாளராக வேலை பார்த்த தனது தந்தை உயிரிழந்ததால் அவரது வேலையைப் பெற மகளான எனக்கு தகுதி இல்லை என கூறுகின்றனர், நான் விதவை என்பதால் அந்த வேலையைக் கருணை அடிப்படையில் எனக்கு வழங்க ஆவன செய்யவேண்டும் என்று பெண் ஒருவர் அளித்த மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய லக்னோ அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும், அந்தப் பதவியில் தன்னை நியமிப்பதன் மூலம் தனது குடும்ப உறுப்பினர்களை தன்னால் இயன்றவரைக் கவனித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ஒரு பெண் திருமணமான ஆன பிறகும், விதவையான பிறகும் கூட மகள் என்ற தகுதியில் அடங்குவார். குறிப்பாகத் தந்தை இறப்பதற்கு முன்பே விதவையான மகள் சட்டப்படி தனது தந்தையின் பலன்களை ஏற்க அனைத்து தகுதியும் உடையவர் என்று தெரிவித்து அவருக்கு தந்தையின் பதவியைக் கருணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.