search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுன்ட்டர்"

    • வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர்செய்ய திட்டம்.
    • தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாகேந்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மேலும், ரவுடிகளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் பரவியது.

    இந்த விவகாரம் தொடர்பாக, ரவுடி நாகேந்திரனை என்கவுன்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி, வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் தெரவித்துள்ளார்.

    அதனால், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாநே்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    • பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர்.
    • போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் திருச்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    துரைசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது.

    துரைசாமி, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியை பிடிக்கச் சென்றபோது சம்பவம் நடந்துள்ளது.

    ஏற்கனவே ஒரு முறை ரவுடி துரையை போலீசார் துப்பாக்கியில் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்துள்ளார்.

    • போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார் ரவுடி விஷ்வா.
    • ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், சுங்கவார்சத்திரத்தில் ரவுடி மீது போலீசார் என்கவுண்டர் நடத்தினர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி விஷ்வா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

    பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஷ்வாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.

    ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    • துப்பாக்கிகள், கியாஸ் சிலிண்டர்கள், வெடிகுண்டுகள் பறிமுதல்
    • 20 முதல் 30 கொள்ளையர்கள் பதுங்கி உள்ளதால் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது

    பீகார் மாநிலம் சம்பாரன் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் இன்று காலை போலீசார் கொள்ளையர்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மூன்று போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போலீசார் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொள்ளையர்களிடம் இருந்து துப்பாக்கி, கியாஸ் சிலிண்டர், செயல் இழக்காத வெடிகுண்டு, கியாஸ் கட்டர் போன்றவை கைப்பற்றப்பட்டதாக மோடிகாரி எஸ்.பி. கந்தேஷ் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

    மேலும், ''வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவிற்கு தகவல் அனுப்பியுள்ளோம். இன்னும் பல குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. 25 முதல் 30 கொள்ளையர்கள் அந்தப் பகுதியில் உள்ளனர். அவர்களை தேடிவருகிறோம்.

    உயிரிழந்த கொள்ளையர்களின் உடல்கள் உடல்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அவர்களது போட்டோவை அனுப்பி வைத்துள்ளோம். நேபாள எல்லையில் சம்பவம் நடைபெற்றதால் அங்குள்ள காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

    ×