search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி உலகக்கோப்பை 2023"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ந்தேதி நடக்கிறது
    • அக்டோபர் 15-ம் தேதிதான் நவராத்தி விழாவும் தொடங்குகிறது

    இந்தியாவில் வருகிற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ-க்கு பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    • ஸ்காட்லாந்து 234 ரன்கள் சேர்த்தது
    • 8.5 ஓவர்கள் மீதம் இருந்ததும் விக்கெட் கைவசம் இல்லாததால் ஜிம்பாப்வே தோல்வி

    உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இலங்கை அணி ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு 9-வது அணியாக தகுதி பெற்றநிலையில், கடைசி இடத்திற்கு ஜிம்பாப்வே, நெதர்லாந்து. ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் கடும்போட்டி நிலவியது.

    நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டி செய்த ஸ்காட்லாந்து 234 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வேயின் நேர்த்தியான பந்து வீச்சால் ஸ்காட்லாந்து அணியால் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை.

    அந்த அணியின் மைக்கேல் லீஸ் அதிகபட்சமாக 34 பந்தில் 48 ரன்கள் அடித்தார். பிராண்டன் மெக்கல்லம் 34 ரன்களும், மேத்யூ கிராஸ் 38 ரன்களும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர், 235 சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. ஷிகந்தர் ரசா (34), ரியான் பர்ல் (83), வெஸ்லி மாதேவேர் (40) வெற்றிக்காக போரடினர்.

    என்றாலும் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததால் 41.1 ஓவரில் 203 சுருண்டது ஜிம்பாப்வே. இதன்காரணமாக 31 ரன்னில் தோல்வியை சந்தித்து இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதியாகும் வாய்ப்பை இழந்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் கிறிஸ் சோலே 3 விக்கெட்டும், பிராண்டன் மெக்கல்லம் மற்றும் மைக்கேல் லீஸ்க் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    நாளை நெதர்லாந்து- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டி தொடரில் விளையாட தகுதி பெறும்.

    ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    சூப்பர் சிக்ஸில் இன்று ஓமன்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. நாளை ஸ்காட்லாந்து- நெதர்லா்நது, அமெரிக்கா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    7-ந்தேதி இலங்கை- வெஸ்ட் அணிகள் விளையாடுகின்றன. 9-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

    உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கு தொடருக்கு 10 அணிகள் தகுதிப்பெற்றன. தலா ஐந்து அணிகளாக இரண்டு பிரிவுகளாக 10 அணிகளும் பிரிக்கப்பட்டன. இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் சிக்ஸ் அணிக்கு தகுதிப் பெற்ற அணிகள் குரூப் பிரிவில் வெற்றி பெற்ற புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக 'பி' பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை குரூப் போட்டியில் இரு அணிகளையும் வீழ்த்தியிருந்ததால் நான்கு புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸில் விளையாடியது.

    • மெகா போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்கு போட்டி பயிற்சிகள் தேவை
    • அனைவரும் உடற்தகுதி மற்றும் நன்றாக இருந்தால் இந்தியா ஒரு முழுமையான அணியாக இருக்கும்

    இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:-

    நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். இந்த மெகா போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்கு போட்டி பயிற்சிகள் தேவை. எனவே இந்திய அணி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும்.

    ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் காயங்கள் ஒரு பகுதியாகும். ஹர்திக் பாண்ட்யாவை நினைத்து நான் எப்போதும் கவலைப்படுவேன். ஏனென்றால் அவர் மிக விரைவாக காயமடைகிறார். முன்னணி வீரர்கள் அனைவரும் உடற்தகுதி மற்றும் நன்றாக இருந்தால் இந்தியா ஒரு முழுமையான அணியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னணி வீரர்கள் லோகேஷ் ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் காயம் அடைந்து அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்டோபர் 15-ந்தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதல்
    • 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

    ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந்தேதி நடைபெறுகிறது.

    போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதனால் அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் திருவிழா போன்று ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இதற்கிடையே ரசிகர்கள் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் கூடும் வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் ரூம் வாடகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.

    5 ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ரூம் வாடகை, அக்டோபர் 15-ந்தேதியன்று 10 மடங்கு அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரூம்கள் புக் செய்யும் இணையதளம் மூலம் இந்த உயர்வு தெரியவந்துள்ளது. அப்படி விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக தெரிகிறது.

    ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் ரூம் வாடகை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை அகமதாபாத் நகரில் இருக்கிறது. தற்போது அந்த வாடகை 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    அகமதாபாத் நகரில் உள்ள ஐடிசி ஓட்டல்களின் வெல்கம் ஓட்டலில் ஜூலை 2-ந்தேதி ரூம் வாடகை 5,699 ரூபாய். அதுவே அக்டோபர் 15-ந்தேதி 71,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    எஸ்.ஜி. ஹைவேயில் உள்ள ரெனாய்ஸ்சான்ஸ் அகமதாபாத் ஓட்டலில் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதுவே அக்டோபர் 15-ந்தேதி 90,679 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைடு பிளாசா ஓட்டல், ரூம் வாடகையை 36,180 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

    பட்ஜெட் விலையான 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்தாலும் பல நட்சத்திர ஓட்டல்களில் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாம்.

    ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் உயர் நடுத்தர இந்திய ரசிகர்கள் அதிக அளவில் ரூம்களை புக் செய்ய ஆர்வம் காட்டி வருவதால் வாடகை உயர்த்தப்பட்டள்ளது.

    குறிப்பிட்ட நாளில் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி கூடுதல் வருமானம் பார்க்கலாம் என நினைத்திருக்கலாம். விலை உயர்த்தப்பட்டாலும் ரூம்கள் அனைத்தும் நிரம்பி விடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதுதான் அதற்கு காரணம். தேவை குறைந்தால் வாடகை தானாக குறைக்கப்படும்.

    இந்தியா- பாகிஸ்தான் போன்ற சுவாரஸ்ரமான கிரிக்கெட் போட்டியை பார்க்க வெகு தூரத்தில் இருந்து வர தயங்காத ரசிகர்கள் ஆடம்பர ஓட்டல்களை விரும்புகின்றனர்'' என்றார்.

    நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் ரூம் வாடகை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. போட்டி நாள் நெருங்கும் நேரத்தில் வாடகை உயர்வுக்கு வாய்ப்புள்ளது.

    • அரையிறுதி ஆட்டங்கள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது
    • இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்

    இந்தியாவில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஆனால் இந்தியா ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடுகிறது.

    அக்டோபர் 8-ந்தேதி (ஞாயிறு): இந்தியா- ஆஸ்திரேலியா

    அக்டோபர் 14-ந்தேதி (சனி): நியூசிலாந்து- வங்காளதேசம்

    அக்டோபர் 18-ந்தேதி (புதன்): நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான்

    அக்டோபர் 23-ந்தேதி (திங்கள்): பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்

    அக்டோபர் 27-ந்தேதி (வெள்ளி) பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா

    ×