search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல ரவுடி கைது"

    • சி.டி. மணியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    • வேலூர் மாவட்டத்தில் மோகன் என்பவரை கொலை செய்த வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு சென்னையில் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி திருவேங்கடத்தை கடந்த ஜூலை மாதம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி காக்காதோப்பு பாலாஜியும் போலீஸ் என்கவுண்டரில் பலியானான்.

    இந்த 2 ரவுடிகளும் பிடிக்கச் சென்ற போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்திய காரணத்தால் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்கள்.

    இவர்களை தவிர 300-க்கும் மேற்பட்ட ரவுடிகளும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2½ மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் ரவுடிகள் வேட்டையில் சென்னையை கலக்கி வரும் பிரபல ரவுடிகளும் சிக்கி வருகிறார்கள்.

    அந்த வகையில்தான் கடந்த 18-ந்தேதி வட சென்னை பகுதியை கலக்கி வந்த பிரபல ரவுடியான காக்காதோப்பு பாலாஜியை போலீசார் சுட்டுக் கொன்றார்கள்.

    இந்த நிலையில் அவனது நெருங்கிய கூட்டாளியும் நண்பருமான 'ஏ பிளஸ்'வகையை சேர்ந்த சி.டி. மணி போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னையை விட்டு தப்பி ஓடி சி.டி. மணி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து தென் சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் சி.டி. மணியை நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர்.

    சென்னைக்கு அழைத்து வந்து சி.டி. மணியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த சி.டி. மணி தென் சென்னை பகுதியை கலக்கி வரும் பிரபலமான ரவுடி ஆவான். வட சென்னை ரவுடியான காக்காதோப்பு பாலாஜியுடன் சேர்ந்து சி.டி. மணி பல்வேறு குற்றச் செயல்களுக்கு சதி திட்டம் தீட்டி இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அடையாறு, சைதாப்பேட்டை போலீஸ் நிலையங்களில் சி.டி. மணி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சி.டி. மணியை போலீசார் ஒரு முறை துப்பாக்கியால் சுட்டும் பிடித்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான சி.டி.மணி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தான். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு நடத்தப்பட்டு வரும் அதிரடி வேட்டையில் தற்போது போலீஸ் பிடியில் சிக்கி உள்ளான்.

    ஆரம்பத்தில் சி.டி. விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் சி.டி. மணி என்று அழைக்கப்பட்ட இவன் மீது 10 கொலை உள்ளிட்ட 30 வழக்குகள் உள்ளன. ரவுடிகள் வட்டாரத்தில் சி.டி. மணிக்கு மேஸ்திரி என்ற பெயரும் உண்டு.

    2007-ம் ஆண்டு தேனாம்பேட்டையில் வெங்கடா, 2009-ல் கோயம்பேட்டில் வாழைத்தோப்பு சதீஷ், கே.கே. நகரில் சங்கர், திவாகரன், 2011-ல் கோட்டூர்புரத்தில் கார்த்திக், 2012-ல் சுரேஷ் என சி.டி. மணியின் கொலை பட்டியல் நீள்கிறது.

    2013-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் மோகன் என்பவரை கொலை செய்த வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சி.டி மணியின் தந்தை பார்த்த சாரதி தேனாம்பேட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சேலத்தில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் சி.டி. மணி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.

    வழக்குகளில் தொடர்ந்து நீதி மன்றத்தில் ஆஜராகி வரும் நிலையில் அத்துமீறி வீட்டில் நுழைந்து போலீசார் சிடி மணியை கைது செய்து உள்ளனர். பல ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டு வருவதால், தனது மகன் தற்போது எங்கே உள்ளார்? என்ற விவரங்கள் தெரியாமல் உள்ளது. சி.டி. மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்தியபாண்டி கொலை வழக்கில் கோவையை சேர்ந்த சஞ்சய்ராஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    • ரவுடி தில்ஜீத்க்கு போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்ற போது கால்முறிவு ஏற்பட்டது.

    கோவை,

    கோவையில் சத்தியபாண்டி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலைசெய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சஞ்சய்ராஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவ ர்களிடம் நடத்திய விசாரணையில், சஞ்சய் ராஜா தனது நண்பரான கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும் தற்போது கோவையில் வசித்து வரும் தில்ஜித் (வயது 44) என்பவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி சத்திய பாண்டியை கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில், தலைமறைவாக இருந்த தில்ஜித்தை போலீசார் தேடி வந்தனர்.

    அவர் கடந்த 3 மாதங்களாக டெல்லி, மும்பை, கொல்கத்தா என வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்தார்.

    இந்தநிலையில் தில்ஜித் கோவை வந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அவரை நேற்றிரவு ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்ய சென்றனர். போலீசாரை பார்த்ததும் தில்ஜித் தப்பி ஓடினார்.

    அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் எலும்பு உடைந்தது.

    இதனையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட தில்ஜித்தை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ×