search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் முதல்வர்"

    • இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு சமூகத்தில் இடமில்லை.

    மணிப்பூரில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் 2 மாதத்துக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்தது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹேராதாஸ் (32), உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் மேலும் கூறியதாவது:-

    நேற்று வெளிவந்த துன்பகரமான வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, ஆழ்ந்த அவமரியாதை மற்றும் மனிதாபிமானமற்ற செயலுக்கு ஆளான இரண்டு பெண்களுக்காக என் இதயம் துடிக்கிறது.

    வீடியோ வெளியான உடனேயே, இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து அறிந்து, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு சமூகத்தில் இடமில்லை. குற்றவாளிகளுக்கு எதிராக சாத்தியமான மரண தண்டனை உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள்.
    • ராஜினாமா முடிவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர்.

    இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால், முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் பிரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்யும் முடிவை அவர் திரும்பிப் பெற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    • ராஜினாமா தொடர்பாக முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலான வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர்.

    இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் பிரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×