என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராளிகள்"

    • ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கம் அமைக்க ஆய்வு மேற்கொண்டார்.

    விழுப்புரம்:

    உயர்கல்வித்துறை அமைச்சர்பொன்முடி , மாவட்ட கலெக்டர் பழனி,தலைமையில், விக்கிரவாண்டி எம்.எல்ஏ. புகழேந்தி , விழுப்புரம் எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் ஆ.கோவிந்தசாமிக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் விழு ப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது ,

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் 2.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத் தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதி தியாகிகள் அரங்கம் அமைத்திட அறிவித்தார்கள்.

    மேலும், 6.9.2021 சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021- 2022 -ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது செய்தித்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், அண்ணா மற்றும் கருணாநிதி அமைச்ச ரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமானஆ.கோவிந்தசாமி யின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைத்திட அறிவித்தார். அதனடிப்படையில், விழுப்பு ரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான 1.12.0 ஹெக்டேர் பரப்பாவில் மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ெபான்முடி கூறினார்.

    ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவர் ஜனகராஜ் மாநில தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் அன்னியூர் சிவா ,வருவாய் கோட்டாட்சியர் குமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்)சிவா, உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் பாலாஜி, விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)கலையாமணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திண்டிவனம் வருகை.
    • நாளை மறுநாள் விழுப்புரத்தில் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் நடைபெறும் தி.மு.க. நிரவாகிகள் கூட்டத்தில் முதல்-அமை ச் ச ர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து நாளை மறுநாள் விழுப்புரத்தில் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்காக அவர், நாளை (திங்கட்கிட்கிழமை) மாலைசென்னையில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகிறார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சேகர், தெற்குமாவட்ட செயலாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    இந்த வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ேஜ.வி.எஸ். திருமண மண்டபம் வரை நடந்தே சென்று (ரோடு ஷோ) பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    அதன் பிறகு அந்த மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.

    பின்னர் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வருகை தரும் அவர், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.

    இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை விழுப்புரம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    பின்னர் அதன் அருகில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை யாற்றுகிறார்.

    இவ்விழாவை முடித்துக்கொண்டு அன்று மதியமே அவர், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார். விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி அவரை வரவேற்று திண்டிவனம் நகரம், விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களிலும் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலை களிலும் விளம்பர பதாகைகள், கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகள், கொடி தோரணங்கள் உள்ளிட்டவற்றை தி.மு.க. வினர் வைத்துள்ளனர்.

    ×