என் மலர்
நீங்கள் தேடியது "ரன் அவுட்"
- மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர்.
- தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் 6-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த விக்கெட் கீப்பர் ஜானிபேர்ஸ்டோ (10 ரன்) வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை அடிக்காமல் குனிந்து தவிர்த்தார். ஓவர் முடிந்த நிலையில் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனிடம் பேசுவதற்காக உடனடியாக கிரீசை விட்டு வெளியேறினார். அதற்குள் பந்தை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பு மீது சரியாக எறிந்து அப்பீல் செய்தார்.
???#EnglandCricket | #Ashes pic.twitter.com/dDGCnj4qNm
— England Cricket (@englandcricket) July 2, 2023
டி.வி. ரீப்ளேயை ஆராய்ந்த 3-வது நடுவர் எராஸ்மஸ் இதை ஸ்டம்பிங் என்று அறிவித்தார். இதனால் மிகுந்த அதிருப்தியுடன் பேர்ஸ்டோ நடையை கட்டினர். ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் 'இது பழைய ஆஸ்திரேலியா தான். எப்போதும் மோசடி... மோசடி...' என்று கோஷமிட்டனர்.
மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர். தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.
அவர் அவுட் ஆகும் போது ரன் அவுட் என கூறிய நிலையில் போட்டி முடிந்த பிறகு அது ஸ்டெம்பிங் என மாற்றப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவுட்தான் என்றும் நாட் அவுட் என்றும் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 178 ரன்கள் தேவைப்பட்டது.
- ஷான் மசூத் நோ பாலில் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டார்.
- ஆனாலும் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
லீட்ஸ்:
இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் யார்க்ஷைர் - லாங்க்ஷைர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த யார்க்ஷைர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் ஷான் மசூத் 61 ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டியின் 15-வது ஓவரை ஜாக் பிளேதர்விக் வீசினார். அப்போது ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற ஷான் மசூதின் கால்கள் ஸ்டம்பில் பட பெயில்ஸ் கீழே விழுந்தது. இதனால் ஹிட் விக்கெட் என நினைத்த அவர் கிரீசை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த பந்தை நடுவர் நோ பால் என்றார். இதையறியாத ஷான் மசூத், த்ரோ எறிவதை கண்டு வேகமாக ஓடியும் கிரீசை எட்ட முடியாததால் ரன் அவுட் ஆனார்.
ஒரே பந்தில் ஷான் மசூத் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் நடுவர் ஷான் மசூதை மீண்டும் விளையாடும்படி கூறியது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
நோ பால் சிக்னலை கவனிக்கவில்லை என்பதால் ஹிட் விக்கெட் என நினைத்து வெளியேற முயற்சித்தேன் என எதிரணி கேப்டன் மற்றும் அம்பயர்களிடம் ஷான் மசூத் கூறினார். இதனால் அம்பயர் ரன் அவுட்டை சரிபார்த்தார்.
எம்.சி.சி. விதிகளின்படி ஒரு பேட்ஸ்மேன் தவறான புரிதல் காரணமாக கிரீசில் இருந்து வெளியேறினால், நடுவர் அந்த பேட்ஸ்மேனை பேட்டிங் செய்ய அழைக்கலாம் அல்லது அந்த பந்தை டெட் பாலாக அறிவிக்கலாம். இதனாலேயே ஷான் மசூத் மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Shan Masood steps on his stumps off a no ball, Lancashire take the bails off at the other end - but Masood remained not out under law 31.7 pic.twitter.com/yQG6gP6Rac
— Vitality Blast (@VitalityBlast) June 20, 2024
- பந்தை பிடிக்கும் முன்னரே விக்கெட் கீப்பர் ஸ்டெம்பை காலால் மீதித்து விட்டார்.
- இதனை அறியாத தினேஷ் கார்த்திக் அவுட் என நினைத்து க்ரீசுக்குள் வராமல் வெளியே நின்றார்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 3-வது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - ஜோ ரூட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதில் அபாரமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 26 ரன்களிலும் பிரிட்டோரியஸும் 26 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பார்ல் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இத்தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்ய தமிழக வீரர் களமிறங்கினர். அப்போது அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அணியின் ஃபினிஷராக தேர்வுசெய்யப்பட்ட தினேஷ் கார்த்திக் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது.
ஆனால் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை ரன் அவுட் மூலம் வீணாக்கி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார். இன்னிங்சின் 13-வது ஓவரை ஜார்ஜ் லிண்டே வீசிய நிலையில், அந்த ஓவரின் 2-வது பந்தை தினேஷ் கார்த்திக் ஆஃப் சைடில் அடித்துவிட்டு சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார்.
ஆனால் மறுபக்கம் நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த பிஜோர்ன் ஃபோர்டுயின் முதலில் ரன்னிற்கு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியேறி அதன்பின், வரமறுத்து எதிர்முனையின் க்ரீஸிக்கு திரும்பினார்.
ஆனால் அச்சமயத்தில் தினேஷ் கார்த்திக் பாதி பிட்சை கடந்திருந்த காரணத்தால் அவரால் மீண்டும் க்ரீஸுக்குள் நுழையமுடியவில்லை. அதேசமயம் பந்தை பிடிக்கும் முன்னரே விக்கெட் கீப்பர் ஸ்டெம்பை காலால் மீதித்து விட்டார். இதனை அறியாத தினேஷ் கார்த்திக் அவுட் என நினைத்து க்ரீசுக்குள் வராமல் எதிர் முனையில் இருந்த வீரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.
இதனை சுதாரித்து கொண்ட விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கெல்டன் பந்தை கையில் வைத்து கொண்டு ஸ்டெம்பை தூக்கி ரன் அவுட்டை உறுதி செய்தார். தினேஷ் கார்த்திக் உள்ளே வந்திருந்தால் கூட ரன் அவுட்டை தவிர்த்திருக்கலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜூனியர் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
- முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கைப்பற்றியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஜூனியர் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜூனியர் தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 299 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 319 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 336 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இந்நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.
முன்னதாக இந்த போட்டியில் துரதிஷ்டவசமாக இங்கிலாந்து வீரர் ரன் அவுட் ஆகியுள்ளார். ஜேசன் ரோல்ஸ் பந்து வீச்சில் ஸ்விப் ஆட முயன்ற போது சில்லி பாய்ண்ட்டில் நின்ற பீல்டரின் ஹெல்மெட்டில் பந்து வேகமாகபட்டு திரும்பி ஸ்டெம்பில் வந்து பட்டது. அந்த நேரத்தில் பேட்டர் ஆர்யன் சாவந்த் கிரிசுக்கு வெளியே இருந்தார். இதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
இது புதுவிதமான ரன் அவுட் ஆக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.