search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன் அவுட்"

    • ஷான் மசூத் நோ பாலில் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டார்.
    • ஆனாலும் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் யார்க்ஷைர் - லாங்க்ஷைர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த யார்க்ஷைர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் ஷான் மசூத் 61 ரன்கள் எடுத்தார்.

    இந்தப் போட்டியின் 15-வது ஓவரை ஜாக் பிளேதர்விக் வீசினார். அப்போது ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற ஷான் மசூதின் கால்கள் ஸ்டம்பில் பட பெயில்ஸ் கீழே விழுந்தது. இதனால் ஹிட் விக்கெட் என நினைத்த அவர் கிரீசை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த பந்தை நடுவர் நோ பால் என்றார். இதையறியாத ஷான் மசூத், த்ரோ எறிவதை கண்டு வேகமாக ஓடியும் கிரீசை எட்ட முடியாததால் ரன் அவுட் ஆனார்.

    ஒரே பந்தில் ஷான் மசூத் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் நடுவர் ஷான் மசூதை மீண்டும் விளையாடும்படி கூறியது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    நோ பால் சிக்னலை கவனிக்கவில்லை என்பதால் ஹிட் விக்கெட் என நினைத்து வெளியேற முயற்சித்தேன் என எதிரணி கேப்டன் மற்றும் அம்பயர்களிடம் ஷான் மசூத் கூறினார். இதனால் அம்பயர் ரன் அவுட்டை சரிபார்த்தார்.

    எம்.சி.சி. விதிகளின்படி ஒரு பேட்ஸ்மேன் தவறான புரிதல் காரணமாக கிரீசில் இருந்து வெளியேறினால், நடுவர் அந்த பேட்ஸ்மேனை பேட்டிங் செய்ய அழைக்கலாம் அல்லது அந்த பந்தை டெட் பாலாக அறிவிக்கலாம். இதனாலேயே ஷான் மசூத் மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர்.
    • தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் 6-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த விக்கெட் கீப்பர் ஜானிபேர்ஸ்டோ (10 ரன்) வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை அடிக்காமல் குனிந்து தவிர்த்தார். ஓவர் முடிந்த நிலையில் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனிடம் பேசுவதற்காக உடனடியாக கிரீசை விட்டு வெளியேறினார். அதற்குள் பந்தை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பு மீது சரியாக எறிந்து அப்பீல் செய்தார்.

    டி.வி. ரீப்ளேயை ஆராய்ந்த 3-வது நடுவர் எராஸ்மஸ் இதை ஸ்டம்பிங் என்று அறிவித்தார். இதனால் மிகுந்த அதிருப்தியுடன் பேர்ஸ்டோ நடையை கட்டினர். ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் 'இது பழைய ஆஸ்திரேலியா தான். எப்போதும் மோசடி... மோசடி...' என்று கோஷமிட்டனர்.

    மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர். தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.

    அவர் அவுட் ஆகும் போது ரன் அவுட் என கூறிய நிலையில் போட்டி முடிந்த பிறகு அது ஸ்டெம்பிங் என மாற்றப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவுட்தான் என்றும் நாட் அவுட் என்றும் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 178 ரன்கள் தேவைப்பட்டது.

    ×