என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது இடத்தில்"

    • அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மது அருந்த அனுமதியளித்தது தெரியவந்தது.
    • மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    அந்தியூர்:

    சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீசார் தவிட்டுப்பாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (33), தனது மீன் கடைக்கு அருகில் எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மது அருந்த அனுமதியளித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரது கடையின் அருகில் இருந்து மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • கடத்தூர் போலீசார் காசிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்போது பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கோபி:

    கடத்தூர் போலீசார் காசிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் வைத்து மது அருந்திய நம்பியூர் பகுதியை சேர்ந்த அரசு என்கிற ராமன் (19) மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோன்று பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய நம்பியூர் பகுதியை சேர்ந்த கவுதம் (20), அஜித்குமார்(21) ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

    ×