search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெமூர் கடற்கரை"

    • ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. கடற்கரை ஒட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
    • லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது.

    ராஜாக்கமங்கலம்:

    குமரி மாவட்டம் முழுவதும் இன்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஆரோக்கிய புரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. கடற்கரை ஒட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் ராட்சத அலைகள் வேகமாக மோதியது. 3-வது நாளாக கடல் சீற்றமாக உள்ளதால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று பயிற்சி டாக்டர்கள் தடையை மீறி கடலில் கால் நனைத்தபோது ராட்சத அலையில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.


    இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

    நுழைவு வாயில் அருகே உள்ள பாதை வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் சிவப்பு கலரில் கொடி கட்டப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். கடற்கரைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை.

    சொத்தவிளை கடற்கரை, முட்டம் கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளிலும் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை. கடலோர காவல் படை போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கடல் சீற்றம் அதிகரிப்பு காரணமாக நடவடிக்கை
    • அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பரபரப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் வழக்க மாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.

    அதன்படி தற்போது ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதி கடும் சீற்றமாக உள்ளது. இதன் காரணமாக மீனவ கிராமங்களில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். கடல் சீற்றம் காரணமாக வேகமாக வரும் அலைகள், அவர்களது வீடுகள் வரை வருவது தான் அச்சத்திற்கு காரணமாக உள்ளது.

    இந்த சூழலில் சுற்றுலா வாக கடற்கரைகளுக்கு வரும் மக்களும் கடல் சீற்றத்தால் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கன்னியாகுமரி, சொத்த விளை, குளச்சல், கணபதிபுரம் லெமூர் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் அதிக அளவில் வருவது வழக்கம். அதன்படி விடுமுறை நாளான நேற்று ஏராளமானோர் குடும்பத்துடன் கடற்கரை பகுதிகளுக்கு வந்தனர். இதில் லெமூர் கடற்கரைக்கு வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி யது. அங்கு கடல் சீற்றம் காரண மாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கணபதிபுரம் பஞ்சாயத்து சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்தில் குடும்பத்துடன் ெலமூர் கடற்கரை வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சீற்றம் காரணமாக கடலில் நீராடவும், கால் நனைக்கவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள தாக அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ×