search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே. வாசன்"

    • பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு.
    • மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.

    தூத்துக்குடி:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு இயக்கம் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார் நடிகர் விஜய்.

    இன்றைக்கு அவருடைய கட்சியினுடைய கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றுவதாக அறிவிப்பு வந்து இருக்கின்றது. மக்கள் பணி, இயக்கப் பணி, மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அந்த வகையில் மக்களின் நம்பிக்கையை பெறுபவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது உறுதி.

    புதிய கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    பாலியல் தொந்தரவு என்பது உலக அளவில் இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மிருகத்தனமான பாலியல்கள் செய்திகளை கேட்கும்போது வருத்தமாக இருக்கின்றது.

    இந்த பாலியல் சீண்டலில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருவது, பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் யார் என்று முதல் நிலையிலே தெரிந்தாலே உடனடியாக அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான். அப்படி கடுமையான தண்டனை இருக்குமேயானால் அடிப்படையில் பயம் இருக்கும்.

    சட்டம், ஒழுங்கு எங்கு கெடுவதாக இருந்தாலும் அதற்கு குடிப்பழக்கம், போதைப் பொருட்கள் தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதனுடைய தாக்கம் பாலியல் தொல்லைக்கும் வழி வகுக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு வேதனைக்கும், வருத்தத்திற்கு உரிய விஷயம். பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று தெரிந்தால் நேரம், காலம் தாழ்த்தாமல் உடனடியாக 20 மணி நேரம், 48 மணி நேரத்தில் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கையை அளித்த போதும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடமும் தமிழக அரசும் தகுந்த முன்னேர்பாடுகள் செய்யாமல் பல்வேறு இடங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு வந்த நெல்மணிகளும் கொள்முதல் செய்த நெல்மணிகளும் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

    விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதோடு கோடை காலங்களில் ஏரி, குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அளிக்கும் மழை தண்ணீரை சேமிக்கும் திட்டம் கர்மவீரார் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கோடைகாலம் முடிவதற்குள் மழைநீர் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளை செப்பணிட்டும், இப்பணிகளை ஒருகாலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயடைய உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
    • கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பெற வேண்டிய காவிரி நீர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவிட வேண்டும். காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி ஆகியோர் காவிரி நீர் விவகாரத்தில், மேகதாது அணைப் பிரச்சினையில், தமிழகத்துக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற வேளையில் தமிழக தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் யார் பக்கம். கர்நாடக காங்கிரஸ் பக்கமா அல்லது தமிழக விவசாயிகள் பக்கமா.

    அதாவது கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும். எனவே காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் அத்துமீறிய பேச்சை, செயலை கண்டித்து, ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக மீனவர்களுக்கு அளித்துவரும் தொடர் அச்சுறுத்தலால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
    • தற்பொழுது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கச்சத்தீவையொட்டிய இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்களையும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகளை சேதப்படுத்துவதும் என்று இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்துவரும் தொடர் அச்சுறுத்தலால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

    இனிமேலும் தாமதிக்காமல் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வுகாண வேண்டும். தற்பொழுது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். மீனவர்கள் பாதுகாப்புடன், அச்சமில்லாமல் தங்கள் தொழிலை மேற்கொள்ள, அமைதியான சூழ்நிலை நிலவ, உரிய முயற்சியை மேற்கொள்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×