என் மலர்
நீங்கள் தேடியது "தொற்று நோய்"
- போதுமான சுகாதார வசதிகள் இல்லை
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு வெளிநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் போதுமான சுகாதார வசதிகள் இல்லை என நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவு சுகாதார பணிகள் செய்வதில்லை என நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 தினங்களாக செங்கம் பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்கின்றது. தேங்கி நிற்கும் மழை நீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் நோயாளிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இது போன்ற சுகாதார சீர்கேடுகளால் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படும் அவல நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள கழிவறை கட்டிடம் நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவறை கட்டிடத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும், அரசு மருத்துவமனை முழுவதும் சுகாதார பணிகளை முழுமையாக செய்யவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
- சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யாமல் விட்டுள்ளனர்.
- உடல் உபாதைகள், தொற்று நோய் பரவும் அபாயம்.
ஒகேனக்கல்:
கர்நாடகா மாநில காவிரி கரையோர பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்திருக்கிறது. இந்த யானையை கர்நாடகா மாநில வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அந்த யானை அடித்து வரப்பட்டு பிலிகுண்டுலு வழியாக மிதந்து வந்து தற்போது ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி பகுதியில் நடு ஆற்றில் உள்ளது.
உயிரிழந்த காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்து இருப்பதால் உடல் பாகங்கள் தண்ணீரில் கலந்து மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்ட மக்கள் அந்த குடிநீரை பருகுவதால் உடல் உபாதைகள், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் கலங்களான ஆற்று நீர் காரணமாக பல உடல் உபாதைகள் வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது இந்த உயிரிழந்த யானை ஆற்றில் அடித்து வரப்பட்டதன் காரணமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நம்பியுள்ள மக்கள் மீண்டும் உடல் உபாதைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
எனவே கர்நாடகா வனத்துறையினர் உயிரிழந்த பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானையை அப்புறப்படுத்தி வனப்பகுதியிலேயே அடக்கம் செய்து இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.
இதனையடுத்து கர்நாடக வனத்துறையினர் ஆற்றில் மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடகா வனப்பகுதியிலேயே அடக்கம் செய்ய உள்ளோம் என தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யானை பிரேத பரிசோதனை செய்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் அருகும் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.