என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை நியூசிலாந்து தொடர்"

    • அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் குவித்தார்.
    • டி20 தொடரை நியூசிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.

    நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதனையடுத்து டி20 தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி 14.3 ஓவரில் 143 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 போட்டிகளில் முதன் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை தட்டிச்சென்றார்.

    • கான்வே காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார்.
    • மைக்கேல் பிரேஸ்வெலுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இந்தியாவில் நடைபெறும். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் இடம பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலினுக்கு பதிலாக அஜாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சுமார் ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆல்ரவுண்டர் மிக்கேல் பிரேஸ்வெல், டேவன் கான்வே ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    டிம் சவுதி அணியின் கேப்டனாக தொடர்கிறார். டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் இடம பிடித்துள்ளனர்.

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நொய்டாவில் நடக்கிறது.

    இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது டெஸ்ட் செப்டம்பர் 26-ந்தேதியும் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    • நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது.

    கொழும்பு:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

    அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது.

    சமீபத்தில் 2008-ம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அவர்கள் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

    23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.

    இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியது.

    இந்நிலையில், நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் செப்டம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை என 6 நாட்கள் நடக்கிறது.

    செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதால் அந்த நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் செப்டம்பர் 26-30 வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஓஷதா பெர்னாண்டோ மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து அணி இலங்கை அணியில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்செயா டி சில்வா தலைமையில் இந்த அணி களமிறங்குகிறது.

    ஓஷதா பெர்னாண்டோ மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார். நிஷான் மதுஷ்காவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கபடவில்லை.

    இலங்கை அணி விவரம்:-

    தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷதா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜயசூரியா, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க.

    • முதல் நாள் முடிவில் இலங்கை 302 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் கமிந்து மெண்டிஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

    கொழும்பு:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே 2 ரன்னிலும், பதும் நிசங்கா 27 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    6வது விக்கெட்டுக்கு இணைந்த கமிந்து மெண்டிஸ், குசால் மெண்டிஸ் ஜோடி 103 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் அரை சதமடித்து அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 3 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார்.
    • இதன் மூலம் பாகிஸ்தானின் சவுத் ஷகீலின் உலக சாதனையை மென்டீஸ் சம் செய்துள்ளார்.

    காலே:

    இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 106 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களம் புகுந்த கமிந்து மென்டிஸ் நிலைத்து நின்று ஆடி அணியை சிக்கலில் இருந்து மீட்டார். அவருக்கு குசல் மென்டிஸ் (50 ரன்) நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதனால் தனது 4-வது சதத்தை நிறைவு செய்த கமிந்து மென்டிஸ் 114 ரன்களில் (173 பந்து, 11 பவுண்டரி) கேட்ச் ஆனார். ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் சேர்த்துள்ளது.

    கமிந்து மெண்டிஸ் சதம் விளாசியதன் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 50-க்கு அதிகமான ரன்களை குவித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல் தனது முதல் ஏழு டெஸ்டிலும் 50-க்கும் அதிகமான ஸ்கோரை அடித்த முதல் டெஸ்ட் வீரர் ஆனார்.

    இதற்கு முன், இந்தியாவின் சுனில் கவாஸ்கர் , பாகிஸ்தானின் சயீத் அகமது , மேற்கிந்தியத் தீவுகளின் பசில் புட்சர் மற்றும் நியூசிலாந்தின் பெர்ட் சட்க்ளிஃப் ஆகியோர் தங்களின் முதல் ஆறு டெஸ்டிலும் தலா அரை சதம் அடித்தனர்.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்கள் எடுத்தது.
    • கமிந்து மெண்டிஸ் சதமும், குசால் மெண்டிஸ் அரை சதமும் கடந்தனர்.

    கொழும்பு:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடி சதமடித்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 50 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவன் கான்வே 17 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஆன டாம் லதாம் அரை சதம் கடந்து 70 ரன்னில் வெளியேறினார். கேன் வில்லியம்சன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 39 ரன் எடுத்தார்.

    இதனையடுத்து கை கோர்த்த டேரில் மிட்செல் மற்றும் டான் பிளண்டெல் சிறப்பாக விளையாடி, 2-வது நாளில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 41 ரன்னும், டாம் பிளண்டெல் 18 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். நியூசிலாந்து இன்னும் 50 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்கள் எடுத்தது.
    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்கள் எடுத்தது.

    கொழும்பு:

    இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடி சதமடித்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 50 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து, ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 70 ரன்னும், டேரில் மிட்செல் 57 ரன்னும், கேன் வில்லியம்சன் 55 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 39 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய கிளென் பிலிப்ஸ் 49 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் நியூசிலாந்து 35 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 2 ரன்னில் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு இணைந்த திமுத் கருணரத்னே, தினேஷ் சண்டிமால் ஜோடி 147 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    கருணரத்னே 83 ரன்னிலும், சண்டிமால் 61 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கமிந்து மெண்டிஸ் 13 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செய டி சில்வா தலா 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    • இலங்கை அணி 2வது இன்னிங்சில் 309 ரன்கள் எடுத்தது.
    • நியூசிலாந்து அணி வெற்றிபெற 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    காலே:

    இலங்கை, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் குவித்தார்.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஒரூர்க் 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    35 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. கருணரத்னே 83 ரன்களும் சண்டிமால் 61 ரன்களும் அடித்தனர்.

    நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இலங்கை அணி துல்லியமாகப் பந்து வீசியது. இதனால் நியூசிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். வில்லியம்சன், பிளெண்டல் தலா 30 ரன்னும், டாம் லாதம் 28 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், 4-ம் நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 68 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. அதேபோல், இலங்கை வெற்றி பெற 2 விக்கெட்டுகள் தேவை என்பதால் பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

    • இலங்கை முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார்.இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    35 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. கருணரத்னே 83 ரன்களும் சண்டிமால் 61 ரன்களும் அடித்தனர்.நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இலங்கை அணியின் அபார பந்து வீச்சில் திணறிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். வில்லியம்சன், பிளெண்டல் தலா 30 ரன்னும், டாம் லாதம் 28 ரன்னும் எடுத்தனர்.இறுதியில், 4-ம் நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்திருந்தது.

    ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து வெற்றி பெற 68 ரன்களை அடிக்க வேண்டிய சூழலிலும், இலங்கை அணி வெற்றி பெற 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.

    கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா 1 ரன் மட்டும் அடித்து 92 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக நியூசிலாந்து அணி 211 ரன்களில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 63 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

    • டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது.
    • எங்கள் வீரர்கள் தற்போது சிறப்பாக செயல்படுகின்றனர்.

    இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் 35 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் நியூசிலாந்து அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியின் அபார பந்து வீச்சில் திணறிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் நியூசிலாந்து அணி 211 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    நியூசிலாந்து தொடருக்கு முன்பு இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இலங்கை அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் அவர்களை வீழ்த்தியதில் இருந்து மன உறுதி உயர்ந்துள்ளதாக இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் பெற்ற வெற்றி எங்களது மன உறுதியை உயர்த்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது. எங்கள் வீரர்கள் தற்போது சிறப்பாக செயல்படுகின்றனர்.

    பெரிய பார்ட்னர்ஷிப்கள் எப்போதுமே கலேவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற உதவுகின்றன. ஆனால் எங்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டும். ஏனெனில் எங்கள் கீழ் வரிசை பேட்டிங் மிகக் குறைந்த சராசரியாக இருக்கிறது.

    என்று தனஞ்செயா தெரிவித்துள்ளார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி
    • 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

    இன்று அதே மைதானத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக திமுத் கருணாரத்னே 46 ரன்கள் அடித்திருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய சண்டிமால் சதமடித்து 116 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 78 ரன்களும் கமிந்து மெண்டிஸ் 51 ரன்களும் அடித்து களத்தில் உள்ளனர்.

    ×